வேலூர் நவ 1 - இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) 15வது மாநில மாநாட்டையொட்டி தோழர் வி.பி.சிந்தன் நினைவு ஜோதி மற்றும் வேலூர் மாவட்ட தியாகிகள், தோழர்கள் நினைவு ஜோதி பயண வரவேற்பு கூட்டம் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மண்டி வீதியில் மாவட்டத் தலைவர் டி.முரளி தலை மையில் நடைபெற்றது. வேலூர் கிருஷ்ணா நகர் போக்கு வரத்து கழக பணிமனையில் இருந்து துவங்கிய தோழர் வி.பி.சிந்தன் நினைவு ஜோதி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதி களில் இருந்து தியாகிகள் வி.கே.கோதண்டராமன், கே.ஆர்.சுந்தரம் மற்றும் சிஐடியு முன்னாள் நிர்வாகிகள் வே.கண்ணன்,கே.ஏ.சுந்தரவேலு, ஏ.பி.கோபால், குடியாத்தம் எச்.எம்.அத்தாவுல்லா, வி.இ.ஏகநாதீஸ்வரன் ஆகி யோர் நினைவு ஜோதிகளை மாவட்டச் செயலாளர் எஸ். பரசுராமன் பெற்று கொண்டார். மாவட்ட துணை நிர்வாகிகள் எஸ்.கோவிந்தராஜ், எம்.பி.ராமச்சந்திரன், மு.காசி, வி.நாகேந்திரன், சி.சரவணன், ஏ.பழனியப்பன், எஸ்.செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர தொழிற்சங்க அமைப்பாளர் சி.ஞான சேகரன், சிஐடியு ராணிப்பேட்டை மாவட்ட துணைத் தலைவர் என்.காசிநாதன், காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட பொதுச் செயலாளர் எஸ்.ராமன், விவசாயிகள் சங்கம் கே.சாமிநாதன், விவசாய தொழிலாளர் சங்கம் செ.ஏகலைவன்,வாலிபர் சங்கம் பெ.திலீபன் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.