மதுரை, மார்ச் 25- மாவீரன் பகத்சிங் நினைவு தினத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார் பில் போதைக்கு எதிரான பேரணி மதுரை எஸ். ஆலங்குளத்திலிருந்து ஆனையூர் வரை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி.கருப்பசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.தமிழரசன் முன்னிலை வகித்தார். மதுரை மாநகராட்சி துணைமேயர் டி.நாகராஜன், வாலிபர் சங்க முன்னாள் மாநிலச் செயலா ளர் எஸ்.பாலா, மாதர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆ. செல்வம் ஆகியோர் கையெழுத்திட்டு பேர ணியை துவக்கி வைத்தனர். ஆனையூரில் வாலிபர் சங்கத்தின் கொடியை மாநில துணைச்செயலாளர் மணிகண்டன் ஏற்றிவைத்து உரையாற்றி னார். மாவட்ட பொருளாளர் எஸ்.பால கிருஷ்ணன், சிஐடியு மாவட்ட செயலா ளர் கே.அரவிந்தன், நட்பின் நாயகன் சசி குமார் பேன்ஸ் கிளப் மாநில தலைவர் மதன் மோகன், விஜய் மக்கள் இயக்க வடக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் வி.பாலாஜி, மக்கள் நீதி மய்யம் ஆனை யூர் நகர் செயலாளர் ஆர்.பி.பிரகாஷ், வாலி பர் சங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத் கண்ணன்.மாவட்ட நிர்வாகிகள் திருதரன் , ஹரிகிருஷ்ணன்,ராகுல் ஜி மற்றும் தன்னார்வ அமைப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். வாலிபர் சங்க மேற்கு ஒன்றிய தலைவர் நவநீதகிருஷ் ணன் நன்றி கூறினார்.