தென்காசி, ஜூலை 17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்காசி மாவட்ட முதல் மாநாடு ஆலங்குளத்தில் நடைபெற் றது. மாநாட்டிற்கு முன்னதாக மார்க் கெட் பஜாரில் இருந்து இளைஞர் களின் பேரணி சங்கத்தின் மாவட்ட தலை வர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் துவங்கி மாநாடு நடைபெறும் ஏ.டி.ஜே மண்டபம் வரை வந்து நிறைவடைந் தது. பின்னர் ஏடிஜே மஹாலில் நடை பெற்ற மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி சங்கக் கொடியினை ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். கனகராஜ் அனைவரையும் வரவேற் றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பழனி அஞ்சலி தீர்மானம் வாசித் தார். வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு மாநாட்டை துவக்கி வைத்தார். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் எம்.சத்யா வாழ்த்துரை வழங்கி னார். வாலிபர் சங்க மாவட்ட செயலா ளர் பி.உச்சிமாகாளி வேலை அறிக்கை யை யும்மாவட்ட பொருளாளர் கே. மாடசாமி வரவு செலவு அறிக்கையை யும் முன்வைத்தனர். மாவட்ட செயலா ளர் உச்சிமாகாளி தொகுப்புரை வழங்கி னார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகளையும் மாவட்டக் குழு உறுப்பினர்களையும் அறிமுகப் படுத்தியும் மாநாட்டை நிறைவு செய்தும் மாநில குழு தலைவர் என்.ரெஜிஸ் குமார் பேசினார். தென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி துவங்கிட வேண்டும், அனைத்து துறை அரசு அலுவலகங்கள் மாவட்ட தலைநகரில் அமைத்தல், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 21,000 வழங்குவதற்கு சட்டம் கொண்டு வருதல்,அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், தென்காசி மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, உரு வாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட் டில் 25 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட தலை வராக எம். கிருஷ்ணமூர்த்தி, செயலா ளராக கே.மாடசாமி, பொருளாளராக எம்.கார்த்திக், துணைத் தலைவர் களாக ஏ.திவ்ய பிரீதா, எம்.பால்ராஜ், துணைச் செயலாளராக ஆர்.பாரத், எம். முத்துமாரி மாவட்ட செயற்குழு உறுப்பி னர்களாக ஜெகநாதன், திருப்பதி உள் ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.