திண்டுக்கல், டிச.22- கொடைக்கானல் கிரா மங்களில் வசிக்கும் பெண் கள் பல்வேறு கட்சிகளிலி ருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். கொடைக்கா னல் ஊராட்சி ஒன்றியப்பகுதி யில் வில்பட்டி, கோவில் பட்டி, சத்யா காலனி போன்ற கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் தோட்டத் தொழி லாளர்களாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் உள்ளனர். இவர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு கள் கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில் வேலை வாய்ப்பு கேட்டுப் போராடி வருகின்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் சேர்வது என்று முடிவு செய்து 3 கிரா மங்களிலும் உள்ள நூற்றுக் கும் மேற்பட்ட பெண்கள் கட்சியில் இணைந்துள்ள னர். கடந்த செவ்வாயன்று இதற்காக நடைபெற்ற சிறப்பு கூட்டத்திற்கு வட்டக் குழு உறுப்பினர் கருணா கரன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் தா.அஜாய்கோஷ், வட்டச் செயலாளர் எஸ். ஜோசப் ஆகியோர் உரையாற்றினர். ஷோபனா நன்றி கூறினர்.