districts

மதுரை முக்கிய செய்திகள்

இன்று இராமநாதபுரம்  அனைத்து வட்டங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் 

இராமநாதபுரம்,ஏப்.7- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் 8.04.2023 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம் - புல்லங்குடி (நியாயவிலைக்கடை) . இராமேஸ்வரம் வட்டம் - அரியாங்குண்டு - (இ சேவை மைய கட்டிடம்).  திருவாடானை வட்டம் - புதுபட்டிணம் (நியாய விலைக்கடை). பரமக்குடி வட்டம் -  வாலங்குடி (இ சேவை மைய கட்டிடம், முதுகுளத்தூர் வட்டம் - வெங்கலக்குறிச்சி (நியாயவிலைக்கடை), கடலாடி வட்டம் - வாலிநோக்கம் (நியாயவிலைக்கடை), கமுதி வட்டம் - தலவநாயக்கன்பட்டி (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி) கீழக்கரை வட்டம் - குளபதம் (நியாயவிலைக்கடை) ,ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் - ஆப்பிராய் (நியாயவிலைக் கடை) ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம்,  கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை ,நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற் கொள்ளப்படும்.  மேலும் நியாயவிலைக்கடைகளில் பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  இராமநாதபுரம்  மாவட்டத்திலுள்ள 09 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எதிர் வரும் 08.04.2023 (சனிக்கிழமை) காலை 10  மணியளவில்  நடை பெறவுள்ள குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தோழர் எஸ்.எம்.இக்பால் காலமானார்

மதுரை, ஏப்.7-  சிஐடியு மதுரை நகர் மாவட்டக்குழு முன்னாள் உறுப்பினரும் சாலையோர வியாபாரிகள்-மார்க்கெட் விற்பனையாளர் சங்க துணைத் தலைவருமான தோழர் எஸ். எம். இக்பால் காலமானார் . அன்னாரது மறைவுச் செய்தியறிந்து ,யா. ஒத்தக்கடையில் உள்ள அவரது  இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், எம். பாலசுப்ரமணியம், சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. தெய்வராஜ் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.  

ஒட்டன்சத்திரம் அருகே  ரயில் மோதி கட்டிட தொழிலாளி பலி

ஒட்டன்சத்திரம், ஏப்.7-  ஒட்டன்சத்திரம் அருகே ரயில் மோதியதில் கடடிடத் தொழிலாளி இறந்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள அரண்மனைப்புதூரைச் சேர்ந்தவர் மணிபிரகாஷ் (வயது 29). இவர் ஒட்டன்சத்தி ரத்தில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்துவிட்டு கம்பிளிநாயக்கன்பட்டியில் திண்டுக்கல் - பழனி ரயில்வே சாலையை கடக்க முயன்றார்.அப்போது அந்த  வழியாக வந்த ரயில் மோதி மணிபிரகாஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  இது குறித்து பழனி ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

ஆதித் தமிழர் கட்சியினர்  ரயில் மறியல்

 விருதுநகர், ஏப்.7- விருதுநகரில் ஆதித் தமிழர் கட்சியினர்  இரயில் மறியல் போராட்டம் நடத்த முயற்சி செய்ததால் போலீசார் கைது செய்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி.பதவியை பறித்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஆதித் தமிழர் கட்சியினர்  விருதுநகர் இரயில் நிலையம் முன்பு   மறியல் செய்ய முயன்றனர். அப்போது,  அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார்  தடுத்து  நிறுத்தி 30 பேரை கைது செய்தனர். இதில் மாநில பொதுச் செயலாளர் விஸ்வை குமார், மாவட்டத் தலைவர்  சுந்தர்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

போடியில் 4 போலி மருத்துவர்கள் கைது

தேனி,ஏப்.7 போடி பகுதியில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக புகார் வந்தது. இதனடிப்படையில் போடி அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அதிகாரி பாலமுருகன் போடி தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து சில்லமரத்துப்பட்டி கஸ்தூரி பாய் சாலையைச் சேர்ந்த வீரக்குமரன் (63), சிலமலையைச் சேர்ந்த சுனில் (48), போடி புதுகாலனியைச் சேர்ந்த நாகராஜ் (59), தேவாரத்தைச் சேர்ந்த வினோத்ஜார்ஜ் (51) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஸ்டெதாஸ்கோப் உள்ளிட்ட பல்வேறு மருத்துவஉபகரணங்கள், மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சு.வெங்கடேசன் எம்.பி.நிதியில் சின்டெக்ஸ்- போர்வெல்  அமைக்க அடிக்கல் 

மதுரை, ஏப். 7-  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேச னின்  தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார்  ரூ.5 லட்சம் மதிப்பில் சின்டெக்ஸ் மற்றும் போர்வெல் அமைப்ப தற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி வியாழனன்று மதுரை மாநகராட்சி 85ஆ வது வார்டு ரங்கன் ஆசாரி தெருவில்  நடைபெற்றது.  இதில் துணை மேயர் டி. நாகராஜன், தெற்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா,  மாமன்ற உறுப்பினர் ஜெ. முத்துமாரி, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநகர் மாவட்ட செயலாளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், ஜெ. லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் யூ. எஸ். அபுதாகிர், பி.கோபிநாத் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

போதையில் நபர்கள் தொடர்  ரகளை- வீடு புகுந்து திருடி, மிரட்டல் : பொதுமக்கள் அச்சம்

சின்னாளபட்டி,ஏப்.7- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்து கொடைரோடு பகுதியில் கடந்த சில மாதங்களாக கஞ்சா, சாராயம் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன.  ஜெகநாதபுரம் காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் போதையில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் முதியவர்களை கேலி கிண்டல் செய்து, தகாத முறை யில் நடந்துகொள்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வீடு களுக்குள் புகுந்து பெண்களிடம் ரகளையில் ஈடுபடுவதும், இரவு நேரத்தில் வீட்டிலிருந்து பொருட்களை திருடுகின்ற னர். இதனைக் கண்டிப்பவர்களை ஆயுதங்களை கொண்டு கொலை மிரட்டலும் விடுவதாக கூறப்படுகிறது. இச்சபவம் குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகை யில்,போதையில் வாலிபர்கள் ரகளையில் ஈடுபடும் போது அம்மையநாயக்கனூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தால் காவலர்கள் உடனடியாக வருவ தில்லை, இதுகுறித்து காவல் நிலையத்தில் பல புகார்கள் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்ல.மேலும்  புகார் கொடுக்கச் செல்பவர்களையே காவல்துறை யினர் மிரட்டுகின்றனர். இதனால் போதை வாலிபர்கள் வெளிப்படையாகவே வீடு புகுந்து புகாரளிப்பவர்களை மிரட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் பெண்கள் உட்பட ஆண்களும் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  எனவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து போதை நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.  

இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து  7.5 கிலோ கட்டி அகற்றம்

திருவில்லிபுத்தூர்,ஏப்.7- திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 20 வயது இளம்பெண் வயிற்றில் இருந்த  7.5 கிலோ கட்டியை மருத்துவர்கள் அகற்றினர்.  விருதுநகர் மாவட்டம்,திருவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த 20 வயது பெண் உடல்நிலை சரியில்லை என திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது சினை முட்டை பையில் கட்டி இருப்பது தெரியவந்தது. இந்நிலை யில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் முருகவேல் உத்தரவில் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காளிராஜ் மேற்பார்வையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.  மருத்துவர் மணி கண்டன், அறுவை சிகிச்சை நிபுணர் நாராயணன், மயக்கவி யல் நிபுணர் அனிதா, மருத்துவர் மகேஸ்வரி உள்ளிட்ட  மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து, பெண்ணில் சினைமுட்டை பையில் இருந்த 7.5 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றினர்.

காலமானார்

மதுரை, ஏப். 6-  மதுரை கோ. புதூர் முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவ ரும் பரசுராம்பட்டி அன்னை ஆயிஷா பெண்கள் அரபிக் கல்லூரியின் தாளாளரும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர்களில் ஒருவ ருமான ராஜா ஹுசைன் வியாழனன்று காலமானார் . அன்னாரது மறைவுச் செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், அ. ரமேஷ், எம். பாலசுப்ரமணியம்,  ஜெ. லெனின் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் கே.அலாவுதீன், பொருளா ளர் எம். ஜான்சன், துணைத் தலைவர் எகியா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். 

மணகுடி அருகே தலித் மக்கள் இடுகாடு ஆக்கிரமிப்பு பிணத்தை புதைக்க விடாமல் தடுத்த சாதி ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக அதிகாரிகள்

வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

திருநெல்வேலி, ஏப் 7- பணகுடி காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட லெப்பை குடியிருப்புப் பகுதியில் தலித் மக்கள் இடுகாட்டை பயன்படுத்த விடாமல் தடுத்த  சாதிஆதிக்க சக்தி யினர் மற்றும் காவல்துறை யினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திட வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்கட்சி வலியுறுத்தி யுள்ளது.  இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது;      நெல்லை மாவட்டம், பணகுடி அருகே லெப்பை குடியிருப்பு இந்திரா காலனி யில் 100-க்கும் மேற்பட்ட தலித் மக்கள் வசித்து வரு கின்றனர். இவர்கள் வாழும் பகுதிக்கென தனி ஆதி திராவிடர் மயானம் 40 ஆண்டுகளுக்கு முன்பே பட்டா வழங்கப்பட்டு 8 செண்ட் நிலம் வருவாய்த் துறையினரால் ஒதுக்கப் பட்டு இருந்தது. இந்நிலை யில் சில ஆண்டுகளுக்கு முன்பு மயானம் இருக்கின்ற இடம் தனி நபருக்கு சொந்த மானது என அதே பகுதியை சேர்ந்த சாதி ஆதிக்க சக்தியினர் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆதிக்க சக்தியினருக்கு ஆதரவாக அதிகாரிகள் இந்த நிலையில் சுந்தரி ராஜ் என்பவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்ததை யடுத்து ஆதிதிராவிடர் இடு காட்டில் புதைக்க அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்தனர். இதையறிந்து வந்த இராதா புரம் தாசில்தாரும், பணகுடி காவல்துறையினரும் வழக்கினை காரணம் காட்டி இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்யவிடாமல் தடுத்துள்ளனர். மேலும் மீறி புதைக்க சென்றால் ஊர் ஆண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் மிரட்டி னர். பெண்களே சடலத்தை தூக்கி சென்று அடக்கம் செய்வதென கொண்டு சென்றனர். இதனால் காவல் துறையினர் பெண்கள் சட லத்தை தூக்கவிடாமல் தடுத்தும், அநாகரீகமான முறையிலும் செயல்பட்டுள் ளனர். மாவட்ட நிர்வாகம் தலையிடுக! நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் இறந்தவர்களின் உடலை புதைக்க எந்த தடையும் இல்லையென நீதிமன்றமே கூறியிருந்ததை கருத்தில் கொள்ளாமல்  சாதி ஆதிக்க சக்தியினரும் அவர்களுக்கு உடந்தையாக அரசு அதிகாரி களும் செயல்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடி யாக இதில் தலையீட்டு தீர்வு  காணவும், தலித் மக்களின் இடுகாட்டினை பயன்படுத்த விடாமல் தடுத்த சாதி ஆதிக்க சக்தியினர் மற்றும் பணகுடி காவல் துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட் டக்குழு அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.


ஆளுநர் அரசியல்வாதி ஆகிவிட்டார் அமைச்சர் எஸ்.ரகுபதி சாடல்

புதுக்கோட்டை, ஏப்.7-  புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதிமன்றங்கள் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஆளுநருடைய பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு தெளிவான பதிலை தந்துள்ளார், ஆளுநர் இப்படி பேசி இருக்கக் கூடாது என்று  தன்னுடைய நிலைப்பாட்டை அவர் தெளிவாக தந்திருக்கிறார்,  ஆளுநர் தனது பொறுப்பை மறந்து தற்போது அரசியல்வாதி என்ற நிலைக்கு வந்துவிட்டார். ஆளுநர் என்ற கண்ணோட்டத்தில் கேட்டால் அதற்கு பதில் கூறலாம். அரசியல்வாதியின் பேச்சுக்கு பதில் சொல்ல முடியாது. அதற்கு மக்கள் தீர்ப்பு சொல்வார்கள்.  ஆளுநர் விசயத்தைப் பொறுத்தவரை ஒரு தெளிவான முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுப்பார். அது சட்டமன்றத்தில் தான் எடுக்க வேண்டும் என்பது இல்லை.  ஆளுநர் குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் தந்த பதில்தான்  என்னுடைய பதிலும் என்றார்.

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் மதுபான பார்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

விருதுநகர், ஏப்.7- விருதுநகர் மாவட்டத் தில் ஏராளமான மதுபான பார்கள் அனுமதியின்றி செயல்படுகின்றன. இதனை உடனடியாக அகற்றிட வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட் டத்தில் நிகழாண்டு  மொத்தம் 188 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்ன. இவற்றில் ஒரு சில  மது விற் பனைக் கடைகள் தவிர்த்து ஏராளமான கடைகளுடன் இணைந்து பார்கள் இயங்கி வருகின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்  வீரப்பெருமாள் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பல்வேறு விபரங்களைப் பெற்றுள்ளார்.  அதில்,   விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 188 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 68 டாஸ்மாக் தனியார் பார்கள் அரசிடம் அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இதில் 188 கடைகளில் ஒரு சில டாஸ்மாக் மது விற்ப னைக்கடைகள் தவிர்த்து பிற டாஸ்மாக் கடைகளில் தனியார் பார்கள் இயங்கி வருகின்றன என்ற விபரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அனுமதி பெறாத பார்களால்,  அர சுக்கு செலுத்த வேண்டிய காப்புத் தொகை, மாத  உரி மம் தொகை மற்றும் முன் வைப்புத் தொகை ஆகி யவை செலுத்தப்பட வில்லை. இதன் காரண மாக,  அரசுக்கு பெரும் வரு வாய இழப்பு ஏற்பட்டுள் ளது. அதேவேளை, இதனை கண்காணிக்க வேண்டிய டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் மெத்தனப்போக்குடன் உள்ளது.   எனவே தமிழக அரசு, மாவட்ட முழுவதும் டாஸ்மாக் மது விற்பனைக் கடைகளுடன் இணைந்து எத்தனை பார்கள் அர சிடம் அனுமதி பெறாமல் இயங்குகிறது என ஆய்வு செய்யப்பட வேண்டும். விதி கள் மற்றும் நிபந்தனைகள் மீறி செயல்படும் டாஸ்மாக் மது விற்பனை கடைகள் மற்றும் பார்கள் மீது நடவ டிக்கை எடுக்க  வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.