சிவகங்கை, ஏப்.10- அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமென மாதர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் பாக்கியலட்சுமி, மாவட்டச் செயலாளர் சாந்தி, மாவட்டத் துணைச் செயலாளர் சண் முகப்பிரியா, இசைச்செல்வி, வெள்ளை யம்மாள் உள்ளிட்ட குழுவினர் எஸ்.புதூர், பிரான்மலை, சிங்கம்புணரி, கீழப்பூங்குடி, ஒக்கூர்,செம்பனூர், பனங்குடி ஆகிய கிரா மப்புறங்களில் இருக்கக்கூடிய ஆரம்ப சுகா தார நிலையங்கள், மினி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை மக்கள்ப் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்தும் மக்கள் தொகைக்கேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்து உபகரணங்கள் உள்ளதா? எதிர்காலத்திற்கு தேவைப்படும் கருவிகள் என்னென்ன என்பது குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர். அவர்களது ஆய்வறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:- ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குறைந்தது 25 கிரா மங்கள் உள்ளன. மக்கள் தொகை சுமார் 49 ஆயிரம். மக்களுக்கு சிகிச்சையளிப்ப தற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடு தல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். விஷக்கடி, பாம்புக்கடிகளுக்கான மருந்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப் பதை உறுதிப்படுத்த வேண்டும். ஸ்கேன், எக்ஸ்ரே, இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு உரிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். செவிலியர்களின் எண் ணிக்கையை உயர்த்த வேண்டும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையை மாவட்ட ஆட்சியரி டம் சமர்ப்பித்துள்ளனர். ஆட்சியர் கோரிக் கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக சங்கத்தின் சிவகங்கை மாவட்டச் செய லாளர் சாந்தி தெரிவித்தார்.