districts

img

வாயில் கருப்புத் துணி கட்டி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

திருநெல்வேலி ,டிச .27- அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில் வண்ணார் பேட்டையில் உள்ள போக்குவரத்து மேலாளர் அலுவல கம் முன்பு வாயில் கருப்புத் துணி கட்டி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு சங்க தலை வர் காமராஜ் தலைமை தாங்கினார். துரை ராஜ் தொடங்கி வைத்து பேசினார். பொது செயலாளர் ஜோதி நிறைவு உரை யாற்றினார். நிறுத்தப்பட்ட வழித்தடங்களில்  பொது மக்கள், மாணவர்கள் நலன் கருதி மீண்டும்  பேருந்துகளை இயக்க வேண்டும், போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினார்கள்.