மதுரை, செப்.7- விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கை களைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 7 வியாழனன்று ரயில், ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனொரு பகுதியாக, மதுரை மாநகர், புறநகர் பகுதிகளில் ரயில் மறியல், ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. மதுரை ரயில் நிலைய முற்றுகை போராட் டம் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணே சன் தலைமையில் நடைபெற்றது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கி வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், துணை மேயர் தி.நாகராஜன், மாமன்ற உறுப்பினர்கள் டி.குமரவேல், வை.ஜென்னி யம்மாள், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். முன்னதாக பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள கட்டபொம்மன் சிலை அரு கில் இருந்து பேரணியாக வந்து ரயில் நிலை யம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் காவல்துறையினர் சிலர் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காவல்துறையை கண்டித்தும் தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். காவல் துறை உயர் அதிகாரி வருத்தம் தெரிவித்ததை யடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை புறநகர்
மதுரை புறநகர் மாவட்டத்தில் திருப்பரங் குன்றத்தில் நடைபெற்ற ரயில் மறியலில் மாநி லச் செயற்குழு உறுப்பினர் செ.முத்துக் கண்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.இளங்கோவன், மதுரை புறநகர் முன்னாள் மாவட்டச் செயலாளர் சி.ராம கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். தாலுகாச் செயலாளர்கள் எம்.ஜெயக்குமார் (திருப்பரங்குன்றம்), ஏ.தனபாலன் (அவனியா புரம்), பி.மூர்த்தி (திருமங்கலம்), மதுரை மாமன்ற உறுப்பினர்கள் என்.விஜயா உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர். செல்லம்பட்டி தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியலில் புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.பி.முருகன், செ.முத்து ராணி ஆகியோர் தலைமை வகித்தனர். உசி லம்பட்டி ஒன்றியச் செயலாளர் பெ.ராமர் ஆகி யோர் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர். கூடல்நகர் இந்தியன் வங்கி மறியல் நடை பெற்ற மறியலில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் வே.உமாமகேஸ்வரன்,
மேற்கு ஒன்றி யச் செயலாளர் பி.ஜீவானந்தம், வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் அ.வேல்பாண்டி, அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் எஸ். ஆண்டிச்சாமி மற்றும் மாவட்டக் குழு உறுப்பி னர்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர். யா.ஒத்தக்கடை ஸ்டேட் பேங்க் முன்பு நடை பெற்ற மறியலில் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் த.செல்லக்கண்ணு, தாலுகாச் செயலா ளர்கள் எம்.கலைச்செல்வன் (கிழக்கு), எம். கண்ணன் (மேலூர்) உட்பட 120-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி, கள்ளிக்குடி ஆகிய ஒன்றியக் குழுக்கள் சார்பில் டி.கல்லுப் பட்டி தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறி யலில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா. ரவி, மாவட்டக் குழு உறுப்பினர் டி.ஏ.இளங் கோவன், ஒன்றியச் செயலாளர்கள் வி.சமயன் (டி.கல்லுப்பட்டி), ராஜேந்திரன் (கள்ளிக்குடி), காசிமாயன் (சேடப்பட்டி) உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.