districts

img

பண்ணையத் திட்ட செயல்பாடுகள் தேனி ஆட்சியர் ஆய்வு

தேனி,மார்ச் 25- தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர்த்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் கீழ் ஆடு, கோழி, கால்நடைகள், மீன்கள் மற்றும் தீவனப் பயிர்கள் ஆகியவை அடங்கிய ஒருங்கிணைந்த பண்ணைய திடலின் செயல்பாடுகள் மற்றும் உத்தமபுரம் கிராமத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில், நுண்ணீர் பாச னத்திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்   க.வீ.முரளீதரன் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் ஆட்சியர் கூறுகையில், தேனி மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கம்பம் வட்டாரத்தில் 70 விவசாயிகளுக்கு ரூ.31.50 இலட்சம் மதிப்பீட்டிலும், உத்தமபாளைம் வட்டாரத்தில் 30 விவசாயிகளுக்கு ரூ.13.50 இலட்சம் மதிப்பீட்டிலும், மானாவாரி பகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் 100 விவ சாயிகளுக்கு ரூ.45.00 இலட்சம் மதிப்பிலான தீவனப் பயிர்கள், வேளாண் காடுகள் வளர்க்க கன்றுகள், கறவை  மாடு, ஆடுகள், கோழிகள், தேனீ பெட்டிகள் மற்றும் பழக் கன்றுகள் ஆகியவை வேளாண்மை துறை, தோட்டக் கலை துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் செயல்படுத் தப்பட்டு வரும் வேளாண் சார்ந்த திட்டங்களை மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் பயன்படுத்தி தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது, வேளாண்மை இணை இயக்கு நர் அழகுநாகேந்திரன், தோட்டக்கலை துணை இயக்குநர்  பாண்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) முத்துலட்சுமி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்கள் விஜயன், சத்திய மூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.