districts

img

இடைக்கோடு, பாகோடு பேரூராட்சிகளில் வெற்றிக்கு உந்துசக்தியாக சிபிஎம் தலைவர்கள் செய்த பணிகள்

இடைக்கோடு பேரூராட்சியில் சாலையே போடாமல் போட்டதாக கணக்குக் காட்டி மாட்டிக்கொண்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வரலாறு உள்ளது. இந்த முறைகேட்டில் ஒரு பிரதான கட்சியின் முக்கியப் பிரமுகருக்கும் தொடர்பு உள்ளது என்பது ஊர் அறிந்த ரகசியம்.

நாகர்கோவில், பிப்.14- கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பேரூராட்சி தலைவராக 10 ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பு வகித்தவர் ஜெயராஜ். இவர் தற்போது பாகோடு பேரூராட்சி பகுதிகளை  உள்ளடக்கிய இடைக்கோடு வட்டார சிபிஎம் செயலாளராக உள்ளார். இவர் பேரூராட்சி தலைவராக பொறுப்பு வகித்த காலத்தில் பாகோடு பகுதியில் மேற் கொண்ட பணிகள் குறித்தும், மறைந்த ஸ்ரீதரன் நாயர் இடைக்கோடு பேரூராட்சி தலைவராக மேற் கொண்ட பணிகளையும் குறிப்பிட்டு, இவை சிபிஎம் வேட்பாளர்களின் வெற்றிக்கு படிக்கட்டுகளாக அமையும் என்றார். மேலும் அவர் கூறுகையில், திருவட்டாறு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக ஆர்.லீமாறோஸ் இருந்தபோது அவரது உதவியில் இளம்துருத்தியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தரமான திருமண மண்டபம் கட்டப்பட்டது.

இதன் மூலம் கிடைக்கும் வருவாய் பேரூராட்சியின் வளர் ச்சிப்பணிகளுக்கு உதவுகிறது. பாளையம்கட்டி, மேல்புறம் ஆகிய இடங்களில் பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு பதிலாக புதிய தொட்டி அமைக்கப்பட்டது. பல்வேறு இடங்க ளில் புதிய குடிநீர் தொட்டிகள் அமைத்து சீரான விநியோகம் செய்யப்பட்டது. ஏராளமான புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. குடிநீர் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக அந்த திட்டத்தை கிடப்பில் போட்ட தால் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக் காத நிலை நீடித்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வெற்றிபெற்றதும் இத்திட்டத்துக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்றப்படும் என்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமா றோஸ் கூறுகையில், பாகோடு, இடைக்கோடு பேரூராட்சிகளில் சிபிஎம் பொறுப்பில் இருந்த காலங்களில் கோடிக்கணக்கான ரூபாயில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திக் குறிச்சியிலிருந்து பயணம் பகுதிக்கு தாமிரபரணி ஆற்றைக் கடந்து செல்ல சிரமப்பட்ட மக்களுக்கு முதலில் படகு வாங்கி வழங்கப்பட்டது. அடுத்த ஓராண்டுக்குள் மேம்பாலம் கட்டி நிரந்தர தீர்வு காணப்பட்டது.

1996-2001 கால அளவில் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்தபோது சட்டமன்ற உறுப்பிராக இருந்த தோழர் டி.மணியின் பெரும் முயற்சியின் விளை வாக இடைக்கோடு பகுதிக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதுபோன்ற நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் செய்த பணிகள் ஏராளம். நாங்கள் பொறுப்பில் இல்லாத காலங்களில்கூட மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து பொதுமக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியதோடு பல போராட்டங்களையும் இதற்காக நடத்தியுள்ளோம். சிபிஎம் செய்த இத்தகைய பணிகளை வாக்காளர்கள் மறந்து விட மாட்டார்கள். எங்களது நேர்மையும், மக்க ளுக்கு செய்யும் அர்ப்பணிப்புடன் கூடிய அயராத உழைப்பும் சிபிஎம் வேட்பாளர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும் என்றார்.