districts

img

தேவாரத்தில் சிஐடியு போக்குவரத்து ஊழியர் காத்திருப்பு போராட்டம் வெற்றி

தேனி, ஜன.8- தேவாரம் அரசு போக்கு வரத்து பணிமனையில் நிர் வாகம் கோரிக்கையை ஏற் றதை தொடர்ந்து  சிஐடியு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நடத்திய காத்திருப்பு போராட்டம் வெற்றி பெற்றது. வழித்தடத்திற்கு ஒதுக் கப்பட்ட பேருந்துகளை மாற் றாமல் இயக்க வேண்டும். நியாயமான விடுப்புகளை மறுக்கக் கூடாது. தரமான  உதிரி பாகங்கள் வழங்க  வேண்டும். புதிய வழித்தடங்  களில் பணி ஒதுக்கீடு தொழிற் சங்க பாகுபாடு காட்டக் கூடாது. தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சிஐடியு திண்டுக்கல் மண்டல பொதுச் செயலாளர் என். ராமநாதன், துணை பொதுச்  செயலாளர்கள் ஜி.மணி கண்டன், ஜி.கணேசராம், எஸ்.மணிமாறன் சோலை மத்திய சங்க உதவி தலை வர்கள் சுப்ரமணி, எஸ்.முரு கன், மத்திய சங்க செயலா ளர்கள்  ஆர்.சதிஷ்குமார், எஸ்.முத்துக்குமரன், தேவா ரம் கிளை தலைவர் பி  . ராஜ்குமார்,கிளை செயலா ளர் ஏ.சுருளிவேல் பொருளா ளர் பி.பகவதிராஜ் உள்  ளிட்டோர் கலந்து கொண்ட னர். சனிக்கிழமை கிளை மேலாளர் மற்றும் நிர்வா கத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு  ஏற்  பட்டது. அதனைத் தொட ர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.