கும்பகோணம், பிப்.28- தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநிலக் குழு கூட்டம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அம்மா சத்திரத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஆறுமுக நயினார் தலைமை வகித்தார் கூட்டத்தில் மோட்டார் தொழிலை பாதுகாத்திட வேண்டும் மோட்டார் தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாத்திட வேண்டும் வாகன உரி மையாளர்களை பெரிதும் பாதிக்கும் ஆன்லைன் அபராத முறையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்திட வேண்டும். டோல்கேட் கட்டண கொள்ளையை கட்டுப் படுத்திட வேண்டும்.. ஒப்பந்த காலம் முடிவடைந்தும் செயல்படும் சுங்கச்சா வடிகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் வருகிற மார்ச் 28 மற்றும் 29 அன்று நடை பெறும் அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் எஸ் மூர்த்தி மாநிலப் பொருளாளர் வீ குப்பு சாமி தஞ்சை மாவட்ட சிஐடியு செயலாளர் ஜெயபால் சம்மேளன மாநில துணைச் செய லாளர் பார்த்தசாரதி மாவட்டத் தலைவர் கண்ணன் மாநிலக் குழு உறுப்பினர் ஐயப்பன் சாலைப்போக்குவரத்து நகர கவுரவத் தலைவர் செந்தில்குமார் உட்பட மாநிலக் ்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.