districts

img

பேருந்துகளை இயக்க மறுத்ததால் தொடர் மறியல் செய்த மாணவர்கள்

 திருவில்லிபுத்தூர், செப்.12- பள்ளி-கல்லூரி மாண வர்களின் நலன்கருதி அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம்  பேருந்துகளை இயக்க மறுத்த தால் தன்னெழுச்சியாகத் திரண்ட மாணவர்கள் திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையம், மதுரை-செங்கோட்டை சாலையில் அடுத்த டுத்து மறியலில் ஈடுபட்டனர். சிவகாசி அரசு கலைக் கல்லூரி  மற்றும் சிவகாசியில் உள்ள தனி யார் கல்லூரிகளில் திருவில்லி புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த  500-க்கும் மேற்பட்ட மாணவகள் படித்து வருகின்றனர். மாணவர்  கள் வழக்கம் போல் திருவில்லி புத்தூர் பேருந்து நிலையம், சர்ச்  பேருந்து நிறுத்தத்தில் காத்திருந் துள்ளனர் குறித்த நேரத்திற்கு பேருந்து இயக்கப்படாததால் தாமதமாகச் சென்ற மாண வர்களை கல்லூரி முதல்வர் அனு மதிக்க மறுத்துவிட்டார்.  

செவ்வாயன்றும் இதே போல்  குறித்த நேரத்திற்கு பேருந்து வர வில்லை. இதையடுத்து மாண வர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு திருவில்லிபுத்தூர் பேருந்து நிலை யம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.  காவல்துறையினர் சமாதானப் படுத்தி அவர்களை சர்ச் பேருந்து  நிறுத்தத்திற்கு செல்லுமாறு கூறி யுள்ளனர், அங்கும் குறித்த நேரத்  திற்கு பேருந்துகள் வரவில்லை. இதையடுத்து மாணவர்கள் மதுரை-செங்கோட்டை  சாலை யில் மீண்டும் மறியலில் ஈடுபட்ட னர்.  மீண்டும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போக்குவரத்துக் கழக  கிளைமேலாளரும் உடனி ருந்தார். அப்போது, “அரசு கலைக்  கல்லூரி மாணவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே  கல்லூரி முதல்வர் மற்றும் பேரா சிரியர் மூலமாக திருவில்லிபுத் தூர் அரசுப் போக்குவரத்துக் கழக  கிளையில் தனியாக கல்லூரிக்கு ஒரு பேருந்தும் கூடுதல் பேருந்து களும் இயக்கக்கோரி கடிதம் கொடுத்தோம் ஆனால் இன்று வரை எந்த பதிலும் இல்லை என்ற னர்”. அதற்கு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர், “பேருந்து கேட்டு கல்லூரி அனுப்பிய கடிதம் விருதுநகர் மாவட்ட ஆட்சி யரின் கவனத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது. அவரிடமிருந்து வரும் பதிலை பொறுத்துத் தான்  பேருந்துகளை இயக்க முடியும் என்றார். காவல்துறையின் தலை யீட்டிற்குப் பிறகு ஒரு பேருந்து  வரைவழைக்கப்பட்டு மாணவர் கள் கல்லூரிகளுக்குச் சென்றனர்.