districts

மதுரை முக்கிய செய்திகள்

தோட்டத்தில் இறந்த   கூலித் தொழிலாளி

போடி, மே 21-  போடி அருகே தோட்டத்தில் கூலித் தொழிலாளி இறந்து  போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.  தேனி மாவட்டம், போடி அருகே மீனாட்சிபுரம் செல்வ ராஜ் தெருவை சேர்ந்தவர் முனியப்பன் மகன் கணேசன் (42). கூலித் தொழிலாளி. இவருக்கு நெஞ்சுவலி, ரத்த கொதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலையில் நடை பயிற்சி சென்றுள் ளார். மீனாட்சிபுரம் செல்லாயி அம்மன் கோவில் அருகே  செல்லச்சாமி என்பவரது தோட்டத்தில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்துள்ளார். இவர் விழுந்து கிடப்பது  கண்டு உறவினர்கள் சென்று பார்த்தபோது இறந்து போனது தெரிந்தது.  இதுகுறித்து கணேசன் மனைவி சங்கீதா (35) என்பவர் போடி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகா ரின் பேரில்  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை

தேனி, மே 21- தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.  தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. தேனி, பெரியகுளம் ,போடி உள்ளிட்ட இடங்களில் ஞாயிறு மாலை மழை பெய்தது. ஞாயிறன்று காலை  நிலவரப்படி முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 118 அடியாக உள்ளது. 100 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படு கிறது. வைகை அணையின் நீர்மட்டம் 52.95  அடியாக உள்ளது. 114  கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடி நீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது. நீர்  திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம்  88.26 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லாத நிலையில்  3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. போடியில் 4.8 மி.மீ., சோத்துப்பாறை 4 மி.மீ,பெரியகுளம் 68,வைகை 8.6,கூட லூர் 3.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

திருச்சுழி அருகே மின்னல் தாக்கியதில் ஆடு மேய்க்கச் சென்ற 2 பேர் பலி

திருச்சுழி, மே 21-  விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே புல்வாய் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்(28). இவரது உற வினர் விஜய்(27). இருவரும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர்.   இந்நிலையில் சனிக்கிழமையன்று இருவரும் இராணி சேதுபுரம் காட்டுப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றுள்ள னர்.  அப்போது காட்டுப் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய  கனமழை பெய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாலை வேளையில் ஆடுகள் மட்டும் வீடு திரும்பி உள்ளது  ஆடு மேய்க்கச் சென்ற பெருமாள் மற்றும் விஜய் இருவரும் வீடு திரும்பவில்லை. எனவே, உறவினர்கள் இரவு முழுதும் தேடினர்.  இந்நிலையில் ஞாயிறன்று காலை  பெருமாள் மற்றும் விஜ யன் இருவரும்  காட்டுப் பகுதியில் மின்னல் தாக்கி உயி ரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தக வலறிந்து விரைந்து வந்த போலீசார் இருவரது உடல்களை யும் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்ப வம் குறித்து  பரளச்சி  போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடங்கள்

கட்டுமானப்பணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

சிவகங்கை, மே 21- சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை வளாகத்தில் ரூ.30.50 கோடி  மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், கூடுதல் ஒருங்கிணைந்த அவசர கால தாய்சேய் நல சிகிச்சை மையம் மற்றும் 50 படுக்கை கள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகிய கட்டிடங்களுக்கான கட்டுமானப்பணியை மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மணி வண்ணன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் தெரிவிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து  உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத் தப்பட்டு, நவீன மருத்துவ உபகரணங்களும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளன. மேலும், தேவையின் அடிப்ப டையில் கூடுதல் மருத்துவ உபகர ணங்கள் வழங்கவதற்கான நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மருத்துவத்தை எளிதாக கிடைக்கப்பெறச்  செய்து, அவர்களின் உடல்நலத்தை பேணிக் காக்கின்ற வகையில், மருத்து வத்துறையில் பல்வேறு சிறப்புத் திட்டங் களை செயல்படுத்தி, பொதுமக்களின் நலன் காத்து வருகிறார்கள். பொதுமக்கள் அத்திட்டங்களின் மூலம் பயன்பெற்று, தங்களின் உடல்நலத்தினை சிறந்த முறை யில் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். இன்றையதினம் துவக்கி வைக்கப் பட்டுள்ள இந்த 2 கூடுதல் பிரிவு கட்டி டங்களை தரமான முறையில் விரைந்து  முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு  அர்ப்பணித்திட துறை சார்ந்த அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சத்தியபாமா, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பால சந்தர், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆன்ந்த், திருப்புவனம் பேரூ ராட்சித் தலைவர் சேங்கைமாறன், மாவட்ட  ஊராட்சி உறுப்பினர் ஆரோக்கிய சாந்தா ராணி, வாணியங்குடி ஊராட்சி மன்றத்தலை வர் புவனேஷ்வரி, மருத்துவக் கண்கா ணிப்பாளர் குமரவேல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பழனியில் வீடுகள் அகற்றம்: வேறு இடம் வழங்க மக்கள் கோரிக்கை            '

பழனி, மே 20- பழனி அடிவாரம் 30 ஆவது வார்டு மதனபுரம் பகுதியில் 52 வீடுகள் நீர் நிலையில் உள்ளதாகக் கூறி பொதுத்துறையினரும் வருவாய்துறையினரும்  ஆக்கிரமிப்பை  அகற்ற முற்பட்டனர். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.   கடந்த 2007 ஆம் ஆண்டு வையாபுரி குளம்,  சிறுநாயக்கன்குளம் விவசாயிகள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.அதன் தீர்ப்பில், நீர் நிலை அருகே உள்ள வீடுகளை  அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன்படி  இந்த வீடுகளை அகற்றும் போது பொதுமக்களுக்கும் வருவாய்த்துறையினருக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கோட்டாட்சியர் சிவக்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 52 வீடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் வேறு இடம் வழங்கவும் பட்டா வழங்கவும் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் தெரிவித்தார்.

நத்தத்தில் 500 கிலோ குட்கா  பறிமுதல் : 3 பேர் கைது

நத்தம், மே 21- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திற்கு காரில் குட்கா கடத்திவரப்படுவதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனையடுத்து காவல் ஆய்வாளர் தங்கமுனிய சாமி, சப் -இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் உள்ளிட்ட போலீசார்கள் நத்தம் - அய்யாபட்டி சாலையில் உள்ள தேங்காய் குடோனில் திடீர் சோதனை நடத்தி னர். அப்போது அங்கிருந்த சொகுசு காரில்  தடை செய்யப்பட்ட 500 கிலோ குட்கா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் காரில் குட்கா கடத்தி வந்த ஊராளிபட்டியை சேர்ந்த சுதாகர்(35), நத்தத்தை சேர்ந்த முகமது ஈசாக்  (34), ஜஹாங்கீர் (37) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.  தொடர்ந்து 500 கிலோ குட்காவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.