திருப்பூர், ஜன.28- தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 19 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று கோலாகலமாகத் தொடங்கியது. திருப்பூர் காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் மைதானத்தில் துவங்கிய புத்தகத் திருவிழாவை மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாநில ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்தனர். புத்தகத் திருவிழா கண்காட்சி அரங்கில் முன்னணி புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்கள் தங்கள் புதிய வெளியீடுகள் உள்ளிட்ட புத்தகங்களை காட்சிப்ப டுத்தப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமை ஏற்றார். திருப்பூர் எம்.பி.கே.சுப்பராயன், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ், மாநகர மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், பின்னல் புக் டிரஸ்ட் ஆர்.ஈஸ்வரன் உள்பட மக்கள் பிரதிநி திகள், அரசு அதிகாரிகள், பின்னல் புக் டிரஸ்ட் நிர்வாகி கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக மாவட்ட நூலக அலுவலர் வே.மாதேஸ்வரன் நன்றி கூறினார்.