திருநெல்வேலி, மார்ச் 30- மத்திய அரசின் நீர்வளத் துறை மற்றும் ஆறுகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் 2009-ல் தி.மு.க. ஆட்சியில் தொடங் கப்பட்டது. வடகிழக்கு பருவ மழையின்போது தினமும் 3200 கன அடி வீதம் நெல்லை, தூத்துக்குடி மாவ ட்டங்களின் வறட்சி பகுதி களுக்கு கால்வாய் மூலம் திருப்பி விடும் திட்டம் இது. தாமிரபரணியில் இருந்து பிரியும் புதிய கால்வாயு டன் பச்சையாறு- கருமேனி யாறு - நம்பியாறு ஆகிய வற்றையும் இணைக்கும் திட்டம் இது ஆகும். அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் தொடங்கி திசையன்விளை அருகே எம்.எல்.தேரி வரை யிலும் 75 கி.மீ.க்கு தாமிர பரணி நதி நீரை கொண்டு செல்வதாகும். இந்த திட்டத்தின் 3-ம் கட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு அதிகாரிகளுடன் கோட்டைகருங்குளம் மற்றும் மன்னார்புரம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்பு பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவு பிறப் பித்தார். ஆய்வின் போது மாவட்ட பஞ்சாயத்து தலை வர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் பலர் உடன் சென்ற னர்.