districts

img

முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக்குழு ஆய்வு

ணைக் கண்கா ணிப்பு குழுவினர் பிப்ரவரி 1 புதன்கிழமை ஆய்வு செய்த னர். முல்லைப் பெரியாறு  அணையை கண்காணித்து பராம ரிக்க உச்சநீதிமன்றம் கண்காணிப்பு குழுவை அமைத்தது.  தற்போது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன் ராஜ் உள்ளார். இந்த மூவர் குழுவினருக்கு உதவியாக துணை கண்கா ணிப்புக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக தற்  போது கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்  பொறியாளர் சதீஷ் புதிதாக பொறுப்பேற்று உள்ளார். தமி ழக பிரதிநிதிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறி யாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார்,  கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற் பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகி யோர் உள்ளனர்.

இந்நிலையில் துணைக்குழுவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்  பொறியாளர் சதீஷ் தலைமையிலான துணைக்குழுவினர்   பிப்ரவரி 1 புதன்கிழமையன்று  பெரியாறு அணையின் அணையில் செய்யப்பட்டுவரும் வழக்கப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கு அணை பகுதிக்கு சென்றுள்ளனர். முன்னதாக கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள  தேக்கடி படகு துறையிலிருந்து துணை கண்காணிப்பு குழு வின் தலைவர் மற்றும் தமிழக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தமிழகத்திற்கு சொந்தமான படகின் மூலம் அணை பகு திக்குச் சென்றனர். கேரள அதிகாரிகள் கேரளாவிற்கு சொந்தமான படகில் அணை பகுதிக்கு  கிளம்பிச் சென்றனர். அங்கு  முல்லைப் பெரியாறு அணையின் மெயின் அணை, பேபிஅணை, கேலரிப்பகுதி, அணையின்   கசிவுநீர்  குறித்து குழுவினர் ஆய்வு செய்தனர் . இந்த ஆய்விற்கு  பின்பாக துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் குமுளி யிலுள்ள கண்காணிப்புக்குழுவின் அலுவலகத்தில் நடை பெற்றது .இதுகுறித்து குழுவினர் கூறுகையில், அணை யின் நீர்மட்டத்திற்கு ஏற்ப நீர்க்கசிவு இருந்தால் அணை பல மாக இருக்கிறது என்று அர்த்தம். ஆகவே அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் நீர்க்கசிவின் அளவு மிக  துல்லியமாக உள்ளது. ஷட்டர்களும் இயக்கி சரிபார்க்கப்  பட்டன. ஆய்வின் முடிவுகள் கண்காணிப்புக்குழுவுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தனர்.