சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான சின்னக்காமன்பட்டி மற்றும் பெரியார் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த தேர்வான மாணவர்களை கௌரவிக்கும் விதமாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நினைவு பரிசு வழங்கி சால்வை அணிவித்து பாராட்டினார். பின்னர் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள மருத்துவர்கள். பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் வசதிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு மருத்துவமனையில் ஆய்வு செய்தார் இந்நிகழ்ச்சியில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், சாத்தூர் நகர் மன்ற தலைவர் குருசாமி, திமுக கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் முருகேசன் மற்றும் கடற்கரை ராஜ் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.