இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், உச்சிநத்தம் ஊராட்சியில் நவம்பர் 1 அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. உச்சிநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் கணபதி பாமா முன்னிலை வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகித்து, ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் ஆலோசனை மேற்கொண்டார். பொதுமக்களிடம் கோரிக்கை குறித்த மனுக்களையும் ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.