தென்காசி ,டிச.27 தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருநங்கைக ளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் ப.ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரு நங்கைகளுக்கான சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் 12 திருநங்கையர்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி யின் மூலம் ரூ.12 இலட்சம் மதிப்பில் சிறுதொழில் கடன் உதவி தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ப.ஆகாஷ் வழங்கினார்.