பழனி, மே 3- பழனி அருகே உள்ள சிவகிரிபட்டி ஊராட்சியில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடை பெற்றது. இதற்கு சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி வர வேற்றார். சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பேசுகையில், கிராமங்களில் வேலைக்கு செல்லும் அனைவரும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து அதன் பலன் களை முழுமையாக பெற வேண்டும். பழனி அரசு மருத்துவமனை மாவட்ட தலை மை மருத்துவமனையாக உயர்த்தப்பட உள்ளது. பழனியில் சித்தா கல்லூரி விரை வில் வரவுள்ளது. பழனி தாராபுரம் ரயில்வே கேட்டில் விரைவில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. பழனியில் ரூ.930 கோடி செலவில், மாயனூர் காவேரி ஆறு மூலம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பழனி பகுதியில் உள்ள ஊராட்சிகளில் குடிநீர் தேவை நிறைவேற் றப்படும். மேலும் குடிநீர் தேவைக்காக சண்முகநதியில் ஆழ்துளை கிணறு வெட்டப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது என்றார். இதில் பழனி ஆர்டிஓ சிவகுமார், தாசில்தார் பழனிச்சாமி, மாவட்ட மாண வரணி செயலாளர் அஸ்வின் பிரபாகரன். இளைஞரணி செயலாளர் லோகநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரி யப்பன், நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, திமுக ஒன்றிய செயலா ளர்கள் ஆகியோர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.