districts

img

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வு நிலை பேரூராட்சியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செட்டியூரணி புனரமைக்கும் பணி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வு நிலை பேரூராட்சியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செட்டியூரணி புனரமைக்கும் பணியினை திங்களன்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் என்.அம்பலமுத்து, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வி.ந.அருணகிரி, துணைத்தலைவர் பி.பிரவின்குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இரா.ராஜா, செயல் அலுவலர் அ.மு.ஜான்முகம்மது உட்பட பலர் கலந்து கொண்டனர்.