சிவகங்கை, ஜூலை 23- சிவகங்கை மாவட்டம் உள் ளிட்ட ஏழு மாவட்டங்களின் விவ சாயிகள் பயன்பெற காவிரி- வைகை -குண்டாறு இணைப்புத் திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட 8 ஆவது மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் சிவகங்கை மாவட்ட 8 ஆவது மாநாடு ஜூலை 23 அன்று காளையார் கோவிலில் பேரணி யுடன் துவங்கியது. பேரணிக்கு மாவட்டக்குழு உறுப்பினர் அழ கர்சாமி, கரும்பு விவசாயிகள் சங் கத்தின் மாவட்டச் செயலாளர் சக்திவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டிற்கு மாவட்டத் தலை வர் ஜெயராமன் தலைமை வகித் தார். வரவேற்புக்குழு செயலாளர் சாத்தப்பன் வரவேற்றுப் பேசி னார். மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.கே. மாணிக்கம் சங்கக் கொடியேற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் மோகன் அஞ்சலி தீர்மானங்கள் வாசித்தார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் வேலை அறிக்கையும் மாவட்ட பொருளாளர் வீரபாண்டி நிதி நிலை அறிக்கையும் சமர்ப்பித்த னர். மாநில துணைத்தலைவர்கள் முகமது அலி, முத்து ராமு ஆகி யோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் சேதுராமன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மணியம்மா, ஜனநாயக மாதர் சங்க சண்முகப் பிரியா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தென்னரசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஒன்றிய தலை வர் திருநாவுக்கரசு நன்றி கூறி னார்.
புதிய நிர்வாகிகள்
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத் தின் மாவட்ட தலைவராக வீர பாண்டி, செயலாளராக மோகன், பொருளாளராக விசுவநாதன், துணைத் தலைவர்களாக அழ கர்சாமி, ஜெயராமன், துணைச் செயலாளர்களாக ஆறுமுகம், அண்ணாதுரை ஆகியோர் உள்பட 27 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. காவிரி -வைகை -குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கூடு தல் நிதி ஒதுக்க வேண்டும். கொள்ளி டம் ஆற்றில் காவிரி நீர் பல ஆயி ரம் கன அடி நீர் கடலில் கலந்து வீணாகிறது. இத்தண்ணீரை சிவ கங்கை மாவட்டம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் நீர் தேவையை கணக்கில்கொண்டு காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பெரியார் பாசன கால்வாய் தண்ணீரை காளையார்கோவில் ஒன்றியம் மறவமங்கலம் பெரிய கண்மாய் வரை விஸ்தரித்து அமைக்கப்பட்ட கால்வாயை புனர மைக்க வேண்டும். காளையார் கோவிலில் உழவர் சந்தை ஏற் படுத்த வேண்டும் .விவசாயி களின் விளை பொருளை பாது காப்பதற்கு காளையார்கோவிலில் குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும். விவசாயிகள் விளைய வைக்கிற ஜோதிரக நெல்லை அரசே கொள்முதல் செய்ய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். காளையார்கோவிலில் வாழ்வாதா ரமாக இருக்கிற காளையார் கோயில் காளீஸ்வரா மில்லை உட னடியாக திறந்து தொழிலாளர் களுக்கு வேலை வாய்ப்பை ஏற் படுத்திக் கொடுக்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.