சிவகங்கை, ஜூன் 7- சிவகங்கை பேருந்து நிலையத்தில் தரமில்லாமல் கட்டிடம் கட்டப்பட்டுவரும் நிலையில் அதனை மறைக்க கிராவல் மணலை வைத்து மூடி மறைத்த சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. சிவகங்கை பேருந்து நிலையமானது கட்டப்பட்டு சுமார் 50 வருடங்களை கடந்த நிலையில் இங்குள்ள அனைத்து கட்டிடங்களுமே பழுதாகி இடிந்துவிழும் நிலையில் இருந்தது. இத னால் மையத்திலிருந்த கட்டி டத்தை இடித்து புதிய கட்டி டம் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து ஒப்பந்தம் விடப் பட்டு, நிலையில் 1 கோடி யே 95 லட்சம் செலவில் கட் டப்பட்டு வருகிறது. தற்சம யம் பில்லர்கள் எழுப்பபட்டு செங்கல் கட்டுமானம் நடை பெற்றுவருகிறது. இது தர மில்லாமல் உள்ளதாக குற் றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக செங்கல் கட்டு மானம் தொட்டாலே பெயர்ந்து விழும் நிலையிலும் சிமெ ண்ட் கலவை தரமில்லாம லும் உள்ளது. இதனை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை மண்டல அலுவலர் வந்து ஆய்வு செய்ததில் உறுதியான நிலையில் அதனை மாற்றவும் உத்தர விட்டு சென்றார். இந்நிலையில் அந்த கட்டி டத்தை அவசர கதியில் கிரா வல் மண்ணைவைத்து மூடி மறைத்து மீண்டும் கட்டு மான பணியை துவங்கியுள் ளனர். இது பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.சிவ கங்கை நகர் பேருந்து நிலைய கட்டுமான பணி தர மாக கட்டப்படுவது தொடர் பாக அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா ளர் உலகநாதன் சிவகங்கை நகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.