districts

img

கண்மாய் நிரம்ப ஆற்றில் வரத்து வாய்க்கால் பகுதியில் தடுப்புச் சுவர் அமைத்திடுக! விவசாயிகள் கோரிக்கை

 கடமலைக்குண்டு, ஜன.8- மயிலாடும்பாறை அருகே சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் சிறுகுளம், பெரியகுளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயை சார்ந்து ஏராளமான ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் நடை பெற்று வருகிறது.  தங்கம்மாள்புரம் மூல வைகை ஆற்றில் இருந்து  கண் மாய்க்குவரத்து வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த  ஆண்டு மூல வைகை ஆற்றில்  ஏற்பட்டவெள்ளப்பெருக்கின் போது வரத்து வாய்க்கால் அமைந்துள்ள பகுதியில் அதிக அளவில் மணல் குவிந்தது. இதனால் மூல வைகை ஆற்றின் மட்டத்தை விட வரத்து வாய்க்கால் உயரமாக மாறியது. இதனால் ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டாலும் வரத்து வாய்க்கால் வழியாக கண்மாய்க்கு நீர் வருவதில்லை.  இதனால் ஒரு வருடமாக ஆற்றில் நீர்வரத்து இருந்தும் கண்மாய் வறண்ட நிலையில் காணப்பட்டது. எனவே வரத்து வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள்  தொடர்ந்து கோரிக்கை விடு த்தும் பொதுப்பணித்துறை யினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எனவே மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்த விவசாயி கள் ஒன்றிணைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மூலவைகை ஆற்றில் வரத்து வாய்க்கால் அமைந்துள்ள பகுதியில் தற்கா லிகமாக 500 மணல் மூட்டை களை அடுக்கி வைத்தனர். அதன்காரணமாக கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்பட்டது. தொடர் நீர்வரத்து காரணமாக தற்போது கண்மாய் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். தற்போது நீர் முழு கொள்ளளவை எட்டி  விட்டதால் வரும் கோடை  காலத்தில் நீர் பற்றாக்குறை யின்றி விவசாயத்தில் ஈடுபட முடியும் என விவசாயிகள்  தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆற்றில் வரத்து வாய்க்கால் அமைந்துள்ள பகுதியில் புதிய தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.