districts

img

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் படத்திறப்பு!

மதுரை, மே 20- மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்,  பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், அ.மலைச் சாமி, அ. ஹபிஷா ஆகிய மூன்று மூத்த  வழக்கறிஞர்களின் படத்திறப்பு விழா மே 19 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இவ்விழாவில், சென்னை உயர் நீதி மன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.  ராஜா, தகவல் தொழில்நுட்பம் மற்றும்  டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு, பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், அ. மலைச்சாமி, அ. ஹபிஷா ஆகி யோரின் படங்களைத் திறந்து வைத்தனர். வழக்கறிஞர்களுக்கான அறையும் திறக்கப்பட்டது.  நிகழ்ச்சியில் பொறுப்புத் தலைமை நீதிபதி டி. ராஜா பேசுகையில், “மூத்த வழக்க றிஞர்கள் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், அ. மலைச்சாமி மற்றும் அ. ஹபிஷா ஆகி யோர் ஒரு பாரம்பரியத்தை விட்டுச் சென்ற வர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு உதார ணமாக இருந்தவர்கள்” என்று புகழாரம் சூட்டினார். மதுரையில் சட்டக்கல்லூரி மாணவராக  இருந்த நாட்களை நினைவு கூர்ந்த தலைமை நீதிபதி, நீதிமன்ற நடவடிக்கை களைப் பார்க்க மதுரை மாவட்ட நீதி மன்றத்திற்குச் சென்றதையும், வழக்கறி ஞர்களிடம் கலந்துரையாடியதையும், அப்போது, பழனிவேல் ராஜன் எவ்வளவு அடக்கமானவராக இருந்தார் என்பதை நேரிலேயே பார்த்ததாகவும் கூறினார். அதேபோல ஹபிஷாவைப் பற்றி படித்த தாகவும், வழக்கறிஞர்கள் அவரை ஒரு ஆற்றல்மிக்க ஆளுமை என்று தன்னிடம் குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டினார். அதேபோல ‘தலித் பேந்தர்ஸ் ஆப் இந்தி யா’வின் (இன்றைய வி.சி.க.) அமைப்பா ளர் அ. மலைச்சாமி குறித்து பேசிய  தலைமை நீதிபதி டி. ராஜா, வழக்கறிஞர்  அ. மலைச்சாமி அம்பேத்கர், பெரி யார், கார்ல் மார்க்ஸ் போன்றோரின் சித்தாந்  தத்தை பின்பற்றி ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காக போராடினார் என்றார். இந்நிகழ்ச்சியில் மூத்த வழக்கறி ஞர்களின் குடும்பத்தினர், நீதித்துறை அதி காரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதி மன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.