districts

மதுரை முக்கிய செய்திகள்

கண்டமனூர் அருகே பள்ளி மாணவர் தற்கொலை

கடமலைக்குண்டு, ஜூலை 28- தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே அம்பாசமுத்தி ரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு கார்த்திகா என்ற மகளும்  தீபக் (வயது 17) என்ற மகனும் உள்ளனர். கார்த்திகா தேனி  தனியார் பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து  வருகிறார். தீபக் கண்டமனூர் பகுதியில் செயல்படும் தனி யார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலை யில் கடந்த 10 நாட்களாக தீபக் பள்ளிக்கு செல்லவில்லை.  இதுகுறித்து அவரது தாயார் கேட்டதற்கு பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லை என தீபக் தெரிவித்துள்ளார். தீபக்கை பள்ளிக்கு செல்லுமாறு அவரது தாயார் தொடர்ந்து அறிவுறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாத தீபக் புதன்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கண்டம னூர் போலீசார் தீபக் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா விருதுநகர் மாவட்டத்தில்  ஆக.1 உள்ளூர் விடுமுறை

விருதுநகர், ஜூலை 28- விருதுநகர் மாவட்டத்தல் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி  உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறிய தாவது : திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற  ஆண்டாள் திருக்கோவில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை, 24 முதல் ஆகஸ்ட்1 வரை நடைபெறவுள்ளது. அதில்  ஆகஸ்ட்,1 அன்று திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு, ஆகஸ்ட்,1 விருதுநகர் மாவட்டம்  முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படு கிறது. அதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 13 அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டு உத்தரவிடப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

3 டன் ரேசன் அரிசி பறிமுதல் :  3 பேர் கைது

காரியாபட்டி, ஜூலை.28- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள  மல்லாங்கிணறு. பகுதியைச் சேர்ந்த சீனி என்பவரது கிட்டங்கி நந்திக்குண்டு கிராமத்தில் உள்ளது. அதை மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (50) என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கு மதுரையை சேர்ந்த  கணேஷ் பாண்டி, முத்துகிருஷ்ணன் மற்றும் சூரம்பட்டி யை சேர்ந்த பூமி ராஜ் ஆகிய 3 பேர் வேலை செய்து வருகின்றனர்.  இவர்கள், அப்பகுதியில் கிடைக்கும் ரேசன் அரிசியை  அரைத்து 50 கிலோ மாவு மூடைகளாக பேக்கிங் செய்து,  நாமக்கல் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி  வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சோதனை செய்தனர். அதில், 50 கிலோ எடை கொண்ட 64 மூடைகளில் 3.2 டன் ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. மேலும், 44 மூடைகளில் 2.2 டன் அரிசிமாவு இருந்துள்  ளது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீ சார் கணேஷ் பாண்டி முத்துகிருஷ்ணன், பூமிராஜ் ஆகிய  மூவரையும் கைது செய்தனர்.

பெயிண்டர் கொலையில் 3 பேர் கைது

விருதுநகர், ஜூலை 28- விருதுநகர் முத்தாள் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவர் மகன் மாரிச்செல்வம் (19).இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இந்நிலையில், மாரிச்செல்வன், அதே  பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரது உறவினர் பெண்ணை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, விஜய்,அஜித்குமார், ராஜூ ஆகியோர் மாரிச்செல்வத்தை எச்சரித்தார்களாம். ஆனாலும், அவர்  தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜய், அஜித்குமார்,  ராஜூ ஆகியோர் மாரிச்செல்வத்துக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளனர். அவர் போதையில் இருந்தபோது அவ ரைக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்று விட்டார் களாம். எனவே, இதுபற்றி மாரிச்செல்வத்தின் தந்தை விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் மூவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிகளில் புகார் பெட்டி திட்டம் தொடக்கம்

தேனி, ஜூலை 28- தேனி மாவட்ட நிர்வாகம், நீதித்துறை மற்றும் காவல்துறை சார்பில்  பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான புகார்பெட்டி திட்டம் குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி தனியார் பள்ளியில் நடைபெற்றது.இதில் ஆட்சியர் க.வீ.முரளீதரன் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் இதுபோன்ற புகார் பெட்டிகள் வைக்கப்படும். இவற்றை நீதித்துறை கண்காணித்து குற்றப்பிரிவுகளாக இருந்தால் காவல்துறைக்கும், மனநலம் குறித்த பிரச்னையாக இருந்தால் மனநல மருத்துவர்களுக்கும், இதர புகார்கள் என்றால் அந்தந்த துறை அலுவலர்களுக்கும் அனுப்பி தீர்வு காணப்படும் என்றார்.

ஆர்.பி. உதயகுமாருக்கு ஓ.பி.எஸ் ஆதரவு  தேனி மாவட்ட செயலாளர் பதிலடி

தேனி, ஜூலை 28- முடிந்தால் ஓபிஎஸ் வீட்டை தொட்டுப்பார் என ஆர்.பி.  உதயகுமாருக்கு ஓ.பி.எஸ் ஆதரவு தேனி மாவட்ட அதிமுக  செயலாளர் சையது கான் பதிலடி கொடுத்துள்ளார் . இது குறித்து அவர் தேனியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஆர். பி. உதயகுமார் கூறி யுள்ளார். ஆர்.பி. உதயகுமார் உள்பட இரட்டை இலை  சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் தங்கள் பத விகளை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போ ட்டியிடட்டும். நாங்களும் தேர்தலை சந்திக்கின்றோம். எடப்பாடி தரப்பினர் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. ஓபிஎஸ்க்கு எதிராக ஆர்ப்  பாட்டம் நடத்தினர். தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்பி.உதய குமார் ஓ.பி.எஸ் வீட்டை சூறையாட எவ்வளவு நேரம்  ஆகும் என பேசியுள்ளார், இங்கு வந்து ஓபிஎஸ்ஸின் வீட்டை தொட்டுப் பார்க்கட்டும். எடப்பாடி பழனிசாமி யும், ஆர்.பி.உதயகுமாரும் தான் துரோகம் செய்தவர்கள், ஓபிஎஸ் துரோகம் செய்யவில்லை. அதிமுகவிற்கு சசிகலா வையும், டி.டி.வி தினகரனையும் வரவேற்போம் என்று தெரிவித்தார்.

லைவாசி உயர்வை கண்டித்து சிபிஎம் பிரச்சாரம்

அருப்புக்கோட்டை, ஜூலை 28- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசா னது, தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரி வாயு விலையை உயர்த்தி வருகிறது. இதனால், அத்தியா வசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. மேலும், அரிசி, கோதுமை மற்றும் தயிர் ஆகிய உணவுப்  பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரியை விதித்துள்ளது. இதன் காரணமாக, சாதாரண ஏழை, எளிய மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனைக்கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் கிளர்ச்சிப் பிரச்சாரம் நடைபெற்றது. அருப்புக்  கோட்டை திருநகரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு எஸ்.கே.பெரியசாமி தலைமை தாங்கினார். துவக்கி வைத்து நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து பேசினார். முடிவில் தமுஎகச மாவட்ட துணைத் தலைவர் தேனிவசந்தன் சிறப்புரையாற்றினார். மேலும் இதில், நகர்மன்ற உறுப்பி னர் பாலன், தமிழ்செல்வராஜ், அருண்மொழி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

சிபிஎம் போராட்டம் அறிவிப்பு எதிரொலி கருமாத்தூர், செல்லம்பட்டியில் பேருந்து நின்றுசெல்ல அதிகாரிகள் நடவடிக்கை  

மதுரை, ஜூலை 28-  மதுரையில் இருந்தும் தேனி, கம்பம், போடி சென்று  வரும்  அரசு  பேருந்துகள் மற்றும் தனியார்  பேருந்துகள்  கருமாத்தூர்,செல்லம்பட்டியில் நின்று செல்வதற்கு போக்குவரத்துத் துறை சார்பில் போடப்பட்ட  உத்தரவை அமல்படுத்தாதைத் தொடர்ந்து ஜூலை 30 அன்று  மறி யல் போராட்டம் செய்யப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செல்லம்பட்டி ஒன்றிய குழு  சார்பில் அறி விக்கப்பட்டது. இதையடுத்து  புதனன்று மாலை 5 மணி அளவில் உசிலம்பட்டி வட்டாட்சியர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செய லாளர்  வி.பி.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.எஸ். முத்துப்பாண்டி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சீ.குரு சாமி, ஜெ.காசி மற்றும் அரசு  தரப்பில் உசிலம்பட்டி வட்  டாட்சியர்,  போக்குவரத்துதுறை மற்றும் வட்டார போக்கு வரத்து ஆய்வாளர், காவல்துறை ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு மற்றும் தனியார் துறை பேருந்துகள் கருமாத்தூர் செல்லம்பட்டி நிலையங்களில் வருகிற ஆகஸ்ட் 3 முதல் நிறுத்தங்களில் நின்று செல்ல உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.இதன்  பேரில்  தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்  ளது. பேருந்துகள் நிற்காவிடில் மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

ஊராட்சிக்கு சொந்தமான பூங்கா நிலத்தை விற்ற  ஊராட்சி செயலர், முன்னாள் தலைவருக்கு ஓராண்டு சிறை

தேனி, ஜூலை 28- ஆண்டிபட்டி அருகே பூங்காவுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட நிலத்தை விற்பனை செய்த ஊராட்சி செயலர், முன்னாள் தலைவர் ஆகியோருக்கு தலா ஒராண்டு சிறை தண்டனை, மனைப் பிரிவு பொறியியல் ஒப்பந்ததாரருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது  திருமலாபுரம் ஊராட்சியில், பிஸ்மி நகர் என்ற பெயரில் புதிய மனைப் பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த மனைப்பிரி வில் பூங்கா, குடிநீர் தொட்டி, நடை பாதை போன்ற பொது பயன்பாட்டிற்கு 12,877 சதுர அடி நிலத்தை ஊராட்சி நிர்  வாகத்திற்கு ஒதுக்கீடு செய்து பத்திரம்  பதிவு செய்து ஒப்படைக்க வேண்டும். ஆனால், மனைப் பிரிவு பொறியி யல் ஒப்பந்ததாரர் மதுரையைச் சேர்ந்த  பைசுதீன் என்பவர் ஊராட்சி நிர்வா கத்திற்கு ஒப்படைப்பு செய்வதற்கு ஒதுக்கீடு செய்த நிலத்தில், 2,348 சதுர  அடி பரப்பளவுள்ள இடத்தை குப்பி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வெங்க டேஸ்வரன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும், இந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு அப்போதைய ஊராட்சித் தலைவி பழனியம்மாள், துணைத் தலைவர் பால்பாண்டி, செய லர் குமரேசன் ஆகியோர் வரைபட அனு மதி அளித்து முறைகேட்டில் ஈடுபட்ட தாகவும் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன், தேனி  மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் புகார்  அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் பைசுதீன், வெங்கடேஸ்வரன், பழனி யம்மாள், பால்பாண்டி, குமரேசன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்  றத்தில் நடைபெற்று வந்தது. இதனி டையே ஊராட்சி துணைத் தலைவர் பால்பாண்டி காலமானார். இந்த வழக் கினை விசாரித்த நீதிபதி ஜெயமணி, ஊராட்சிக்கு ஒப்படைப்பு செய்ய வேண்டிய நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்தும், கட்டட வரைபட அனுமதி வழங்கியும் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாக மனைப்பிரிவு பொறியியல் ஒப்பந்த தாரர் பைசுதீனுக்கு 2 ஆண்டுகள் சிறை  தண்டனை மற்றும் ரூ.9 ஆயிரம் அப ராதம் விதித்தும், அப்போதைய ஊராட்  சித் தலைவி பழனியம்மாள், செயலர் குமரேசன் ஆகியோருக்கு தலா ஓராண்டு  சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

தேனியில் கனமழை  அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு 

தேனி, ஜூலை 28- மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் தேனி  மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பெரியாறு, வைகை உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது.  தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு  சாரல் மழை பெய்து வந்த நிலையில் புதன்கிழமை மாவட்  டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. தேனி, உத்தமபாளையம், போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 63.94 அடியாக உள்ளது. நீர்வரத்து 2470 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 69 கனஅடி  நீர் வெளியேற்றப்படுகிறது.

நீர் இருப்பு 4398 மி.கன அடி யாக உள்ளது. அதேபோல் முல்லைப் பெரியாறு அணை யின் நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி  உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 133.25 அடியாக  உள்ளது. வரத்து 1274 கனஅடி, திறப்பு 1800 கன அடி,  இருப்பு 5458 மி.கன அடி.  மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.70 அடியாக உள்ளது. வரத்து 136 கன அடி, சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 83.96 அடி, வரத்து 155 கனஅடி, திறப்பு  3 கன அடி.  கும்பக்கரை அருவியில் குளிக்க தடை  கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புதன் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. போடி அருகே உள்ள குரங்கணி பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் போடி அருகே உள்ள அணை பிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பாதுகாப்பு காரணங்கள் கருதி பொதுமக்கள் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையளவு  பெரியாறு 18, தேக்கடி 65, கூடலூர் 17.6, உத்தமபாளை யம் 55.4, வீரபாண்டி 54, வைகை அணை 46.2, மஞ்சளாறு 27, சோத்துப்பாறை 38, ஆண்டிபட்டி 12.6, அரண் மனைப்புதூர் 13, போடிநாயக்கனூர் 45.8, பெரியகுளம் 86 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

காலமானார்

சிவகங்கை, ஜூலை 28- சிவகங்கை மீனாட்சி நகரை சேர்ந்த பவானி (வயது 72)  என்பவர் காலமானார். இவர் ஒய்வு பெற்ற ஆசிரியை ஆவார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துச்சாமியின் துணைவியார் ஆவார். இறுதிநிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், ஒன்றிய செயலா ளர் உலகநாதன் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை யணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி போடி அருகே அமைக்க திட்டம் 

தேனி, ஜூலை 28- தமிழக -கேரள எல்லை அருகே உள்ள முந்தல் பகுதி யில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைக்க மாவட்ட  நிர்வாகத்தின் சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டது . வாகனங்களை கண்காணிக்கும் வகையில் போடி அருகே முந்தல் என்னும் இடத்தில் வனத்துறை மற்றும்  காவல்துறை சார்பிலான சோதனைச் சாவடிகள் உள்ளன. இவற்றுடன் மதுவிலக்கு மற்றும் வணிக வரி சோதனை சாவடிகளையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்  காக ஆட்சியர் க.வீ.முரளீதரன், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பிரவீன்உமேஷ்டோங்கரே ஆகியோர் முந்தல்  பகுதியில் ஆய்வு செய்தனர். காவல்துறை சோதனைச்  சாவடி அருகே அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.

பள்ளி விடுதி மாணவி மாயம் 

தேனி, ஜூலை 28- திண்டுக்கல் மாவட்டம், பண்ணைக்காடு அருகே ஆளப்பட்டி கிராமம் பஜனைமடம் தெருவை சேர்ந்த முத்து மணி மகள் கிருத்திகா(14). இவர் தேனியில் உள்ள நாடார்  சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி  9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று விடுதியில்  இருந்த மாணவி திடீரென மாயமானார். சக மாணவி கள் இதுகுறித்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்த னர். இதனைத் தொடர்ந்து விடுதி செயலாளர் அருள்பிர காசம் தேனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தன்  பேரில் காவல் ஆய்வாளர் வெங்கடாசலபதி வழக்கு பதிவு  செய்து தேடி வருகிறார்.

கோவில் யானை மீது தாக்குதல் 

திருவில்லிபுத்தூர் , ஜூலை 28- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்த மான யானையை  தாக்கியதாக தெரியவந்ததையடுத்து பீட்டா அமைப்பின் மேலாளர்  மீட் அசார் என்பவர் திரு வில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். யானையை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. நகர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.