தூத்துக்குடி,டிச.27 தூத்துக்குடியில் ரூ.63 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை கனிமொழி எம்பி வழங்கினார். மத்திய அரசு நிறுவனமான அலிம்கோ நிறுவனம் மூலம் நாடு முழு வதும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கு அளவீடு செய்யும் முகாம் ஏற்கனவே நடந்தது. அதன்படி ரூ.63 லட்சம் மதிப்பில் 68 மூன்று சக்கர சைக்கிள், 75 சக்கர நாற்காலி, 224 ஊன்று கோல், 119 செயற்கை கை மற்றும் காலிபர், 14 ஸ்மார்ட் போன், 176 காதொலி கருவிகள் உள்பட மொத்தம் 835 உபகரணங்கள் தயார் செய்யப் பட்டு உள்ளன. இந்த உபகரணங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் சமூக வலுவூட்டல் நிகழ்ச்சி தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சண்முகை யா, மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலிம்கோ நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் அசோக்குமார் வரவேற்று பேசினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட விளை யாட்டு அலுவலர் பேட்ரிக் மற்றும் அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகி கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலர் எஸ்.சிவசங்கரன் நன்றி கூறினார்.