சிவகங்கை, ஜன.18- சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியில் மதநல்லிணக்க மஞ்சுவிரட்டு ஜனவரி 18 செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. கண்டுபட்டியில், புனித அந்தோணியார் தேவாலயம் முன்பு பொங்கல் வைத்து மஞ்சு விரட்டு போட்டி நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்ட 138 காளை களும் தொழுவில் பதிவு செய்யப்பட்ட 73 காளைகளும் மற்றும் 450 காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகள் முட்டி படுகாயமடைந்த 19 பேர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பாக நேரியை சேர்ந்த மலைச்சாமி (52) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாதி, மதம் பார்க்காமல் ஒவ்வொரு வீட்டாரும் வீட்டின் வாசலில் நின்று திருவிழாவிற்கு வந்தவர்களை வரவேற்று உணவு வழங்கி னர். கிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் வைத்து கொண்டாடி அதன்பின்பு இந்து ஆல யத்தில் வணங்கி இந்த விழா நடைபெற் றது.