சென்னை, டிச. 15- கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக டிச.16 முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கை வருமாறு: வெள்ளிக்கிழமை (டிச. 16) முதல் ஞாயிற்றுக்கிழமை (டிச. 18) வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திங்கட்கிழமை (டிச. 19) தமிழ் நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வெள்ளிக்கிழமை (டிச. 16) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி களில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தி லும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சனிக்கிழமை (டிச. 17) தென்மேற்கு வங்கக்கடல் பகுதி களில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தி லும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதி களுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு தெரிவித்துள்ளது.