கண்டமனூரில் குழந்தைகளை கடித்துக்குதறிய வெறிநாய்கள்
கடமலைக்குண்டு, அக்.9- தேனி மாவட்டம், கண்டமனூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை மதியம் கண்டமனூர் மெயின் ரோட்டில் தெரு நாய் ஒன்று வெறி பிடித்து குழந்தைகள் மற்றும் பொதுமக்களை கடிக்க தொடங்கியது. வெறி நாய் கடித்ததில் கண்டமனூரை சேர்ந்த ராஜன்பாபு (வயது 17), அஜிதா (6), அன்ஜய் (12), தியா (5), பிரகாஷ் (9), சுகன்யா (27) உள்ளிட்ட 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே கண்டமனூர் கிராமத்தில் அதிகரித்து வரும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியப்பகுதி கோவில்களில் அடிப்படை வசதிகள் இல்லை கண்டுகொள்ளாத அறநிலையத்துறை அதிகாரிகள்
சின்னாளபட்டி,அக்.9- திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றி யத்தில் உள்ள கதிர் நரசிங்க பெருமாள் கோவில். கோபி நாதசாமி கோவில்களில் அதிகளவில் மக்கள் வருகின்ற னர். கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் வாகனங்களை நிறுத்துவதற்கு ரூ.20 முதல் ரூ.50 வரை வசூலிக்கின்றனர். வாகன பார்க்கிங் வசதியும் பக்தர்களுக்கு செய்து கொடுக்கவில்லை. டோக்கன் வாங்கிய பிறகுதான் வாக னங்களை நிறுத்த வேண்டும் என்று கறார் செய்வதால் பக்தர்களுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் கைகலப்பு ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது. மலையடிவாரத்தில் உள்ள கோபிநாதசாமி கோவிலில் மக்கள் வருகைக்கு ஏற்ப குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கள் இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து செயல் அலுவலரிடம் கேட்டபோது, நான் மதியம் வரை அங்கே இருந்தேன். தண்ணீர் வந்து கொண்டி ருந்தது. எனக்கு தெரியாது என்று மழுப்பலாக கூறி னார். கோபிநாதசாமி கோவில் உள்ளிட்ட ஒன்றியப் பகுதி களில் உள்ள கோவில்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன் விரோதம் காரணமாக ஊராட்சி வார்டு உறுப்பினர் கொலை
தேனி, அக்.9- தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள சீலை யம்பட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 40). சீலை யம்பட்டி ஊராட்சி 1 ஆவது வார்டு கவுன்சிலர். தே.மு.தி.க. நிர்வாகியாகவும் இருந்து வந்தார் . அதே பகுதியை சேர்ந்த வர் செந்தில்குமார் (40). இவரது மகன் மருதன். இவர், போக்சோ வழக்கில் சிறைக்கு சென்று வந்தார். இதற்கு துரைப்பாண்டிதான் காரணம் என செந்தில்குமார் கூறி வந்தார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சனிக்கிழமை யன்று மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் செந்தில்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் துரைப்பாண்டி யை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது . இதற்கிடையே துரைப்பாண்டியை குத்தி கொலை செய்த கத்தியுடன் செந்தில்குமார் சின்னமனூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : ஒருவர் போக்சோவில் கைது
அருப்புக்கோட்டை, அக்.9- அருப்புக்கோட்டையில் 17 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஒருவரை போலீசார் போக்சோ சட்டத் தின் கீழ் கைது செய்தனர். அருப்புக்கோட்டை அருகே உள்ள போடம்பட்டி யைச் சேர்ந்தவர் திருக்குமரன்(19). இவர், தனியார் செல்லி டப்பேசி கடையில் வேலை பார்த்த 17 வயதுச் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். எனவே இதுதொடர்பாக சிறுமியின் தாய் காவல்துறை யில் புகார் செய்தாராம்.அதன்பேரில் போலீசார் விசா ரணை நடத்தி, க திருக்குமரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பயிர்க்காப்பீடு பதிவு செய்ய வங்கிகளுக்கு உத்தரவிடுக! மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
இராமநாதபுரம், அக்.9- பயிர்க்காப்பீடு பதிவு செய்ய வங்கி களுக்கு இராமநாதபுரம் ஆட்சியர் உத்தர விட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எம். முத்துராமு ஆட்சியருக்கு அனுப்பிய மனு வில் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தின் நெற் களஞ்சியமான திருவாடானை. ஆர்.எஸ்.மங்களம் பகுதிகளில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதியில் இருந்து விதைப்புப் பணி கள் துவங்கி, பணிகள் முடிந்து மழையை எதிர்நோக்கி இருந்தனர். மாவட்டத்தின் இதர பகுதியிலும் விதைப்புப்பணி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களில் பெய்த மழையால் பயிர்கள் முளைத்து வெளியில் வந்துள்ளது. எனவே பயிர்காப்பீடு செய்ய காலம் கடத்தாமல் மூவிதழ் அடங்கல் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு கடன் வங்கி மற்றும் பொதுத்துறை வங்கி களும் காப்பீடு பதிவு செய்யவும் உத்தர விட வேண்டும், இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
பெரியகுளம் அருகே தாய், மகள் மாயம்
தேனி, அக்.9- பெரியகுளம் அருகே தாய் ,மகள் காணா மல் போனது தொடர்பாக ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முனி சாமி மனைவி சோனியா (வயது 30). முனி சாமி இறந்துவிட்டதால் மகள் அஜித்தா வுடன் (12) தாய் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று 2 பேரும் வெளியே சென்ற னர். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை இதுகுறித்து சோனியா தந்தை பாலுசாமி கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தாய்-மகளை தேடி வருகின்றனர்.
மேம்பாலத்தில் இருந்து விழுந்து இருவர் பலி
விருதுநகர், அக்.9- விருதுநகரில் மேம்பால பக்கவாட்டுச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். விருதுநகர் ஆனைக் குழாய் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (28), எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். . இவரும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் சிவக் குமார் (50) என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற னர். வண்டியை பிரபாகரன் ஓட்டினார். விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் பாலத்தில் பக்கவாட்டுச் சுவர் மீது மோதியது. இதி இருவரும் மேம்பாலத்தில் இருந்து கீழே உள்ள சேவைச் சாலையில் விழுந்து, படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர், இரு வரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அங்கு இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து சிவக்குமாரின் மனைவி ராணி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
உசிலம்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உள்பட 2 பேர் பலி
மதுரை, அக்.9- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்டு லுப்பட்டி - குப்பணம்பட்டி இடையே மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் அபே ஆட்டோ நிலை தடுமாறி சாலை யோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த சக்கிளியங்குளத்தைச் சேர்ந்த 11 வயது பள்ளி மாணவன் லோகேஷ், வாலாந்தூ ரைச் சேர்ந்த ஜெயராஜ் என்ற இருவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். மேலும் சிறுவனின் தாய் ஜெயா, உயிரிழந்த ஜெயராஜின் மனைவி ராஜாத்தி மற்றும் வாலாந்தூரைச் சேர்ந்த சுதா ஆகிய மூவர் படுகாயம டைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உசிலம்பட்டி தாலுகா காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி உசி லம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டக்கருப்பன்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் என்பவர் செல்போன் பேசிக்கொண்டே ஆட்டோ ஓட்டிய போது பள்ளத்தில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசா ரணையில் தெரியவந்தாக கூறப்படுகிறது.
அரசு தேர்வு எழுதுவோருக்கு இலவச பயிற்சி தேனி ஆட்சியர் அறிவிப்பு
தேனி, அக்.9- அரசு பணிக்கு தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதாக தேளி மாவட்ட ஆட்சி யர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார் . இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வரு மாறு: தேனி மாவட்டம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி -1 முதல் நிலை தேர்வு, நில அளவர் மற்றும் வரைவாளர் தேர்வு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரி யத்தால் அறிவிக்கப்பட்ட இரண்டாம் நிலை காவலர் தேர்வுகளுக்கும், ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. வல்லுநர்களை கொண்டு தேர்வுக்கான பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தை தொடர்பு கொண்டு பயன் அடைய லாம். மேலும் போட்டி தேர்வுக்கு தயாராகும் நபர்கள் இணையதளம் மூலம் பாட குறிப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் எழுதி தேர்வுக்கு தயாராகலாம் . இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இளைஞர் உடலை மீட்கக்கோரி கூடலூரில் உறவினர்கள் மறியல்
தேனி, அக்.9- கூடலூர் அருகே ஆற்றில் தவறி விழுந்த இளைஞரின் உடலை மீட்கக் கோரி தேசிய நெடுஞ்சாலையில் உற வினர்கள் மறியலில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம், கூடலூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த சிவா (32) என்ற இளைஞர் கடந்த நான்கு தினங்க ளுக்கு முன்பு காஞ்சிமரத்துரை பகுதியில் உள்ள முல்லைப்பெரியாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். ஆற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் முல்லைப் பெரி யாற்றின் பகுதியில் தீவிரமாக தேடி வந்தனர். காஞ்சி மரத்துரை தடுப்பணை பகுதியில் அதிகளவில் தண்ணீர் தேங்கி இருப்பதால் ஆழமான பகுதியில் சென்று உடலை தேடுவதற்கு மிகவும் சிரமமான சூழ்நிலையால் காலதாம தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது தாயார் மற்றும் உறவினர்கள் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் முல்லைப் பெரியாற்றில் வரும் நீரின் வெளியேற்றத்தை நிறுத்தி இளைஞரின் உடலை கண்டுபிடித்துத்தர அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கம்பம், குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து வந்த கூடலூர் காவல்துறை யினர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக சமாதா னப்படுத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
பைக் மோதி ஒருவர் பலி
தூத்துக்குடி, அக்.9- தூத்துக்குடி டிஎம்பி காலனியை சேர்ந்தவர் முத்துப்பிள்ளை மகன் கருப்பசாமி (78). தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் சனிக்கிழமை மாலை தூத்துக்குடி பாளை யங்கோட்டை ரோட்டில் உள்ள எம்ஜிஆர் பூங்காவில் நடை பயிற்சி சென்று விட்டு பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக ரோட்டை கடக்க முயன்றுள்ளார்.அப்போது பைக் மோதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வேடசந்தூர் அருகே காட்டுப்பகுதியில் இறந்துகிடந்த மயில்-வனத்துறை விசாரணை
வேடசந்தூர், அக்.10- திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி ரெங்கமலை மற்றும் ஆர்.கோம்பை அருகே உள்ள தொப்பைய சாமி மலைப்பகுதியில் இருந்த மயில்கள் இரைதேடி மலைப்பகுதிக்கு கீழே உள்ள விவசாய நிலங்க ளுக்கு வருவது வழக்கமாக கொண்டுள்ளது. வேடசந்தூர் - கோவி லூர் சாலையில் துருவத்துப் பட்டியில் சாலையோரத்தில் காட்டுப்பகுதியல் 4 வயது மதிக்கத்தக்க ஆண் மயில் ஒன்று ஞாயிறன்று உடலில் காயங்கள் இன்றி இறந்து கிடந்தது. இதனையடுத்து அந்த பகுதி விவசாயிகள் அய்ய லூர் வனத்துறை அலுவல கத்திற்கு தகவல் கொடுத்த னர். சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்து இறந்த மயிலை மீட்டு அய்யலூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். கால்நடை டாக்டரை கொண்டு பிரேத பரிசோதனை செய்து வனப் பகுதியில் அடக்கம் செய்த னர். விவசாய நிலத்திற்குள் புகுந்து தொந்தரவு செய்த தால் யாராவது மயிலுக்கு விஷம் வைத்தனரா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
தீபாவளிக்கு முந்தைய நாள் ரேசன் கடைகளை திறக்க பொது மக்கள் வலியுறுத்தல்
விருதுநகர், அக்.9- தமிழகம் முழுவதும் தீபா வளிப் பண்டிகைக்கு முந் தைய நாளன்று பொது மக் கள் வசதிக்காக நியாய விலைக் கடைகளை திறந்து வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தீபாவளித் திருநாள் வரும் அக்டோபர் 24 திங்க ளன்று வருகிறது. இத்திரு விழாவை புத்தாடைகள் அணிந்து, இனிப்பு மற்றும் பலகாரங்கள் தயார் செய்து, பட்டாசு வெடித்து கொண்டா டுவது வழக்கம். சாதாரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களோ, நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் எண்ணெய், பருப்பு, சீனி, ரவை, மைதா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கியே தங்களுக்குத் தேவையான இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்களை தயார் செய்து உண்டு மகிழ்வர். நியாய விலைக் கடை களை பொறுத்தவரை மாதத் தில் முதல் 2 ஞாயிற்றுக் கிழ மைகள் வேலை நாட்களாக வும், பிற ஞாயிற்றுக் கிழமை கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு அவர்கள் பணிபுரியும் தனி யார் நிறுவனங்கள் அக்டோ பர் 22 அன்று தான் போனஸ் வழங்குவது வழக்கம். அந்த தொகை மூலம் தனியாரிடம் உணவுப் பொருட்களை வாங்கினால் கூடுதல் செல வாகி ஏழை எளியோர் பாதிக் கப்படுவார்கள். எனவே, தீபாவளிப் பண் டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுத லாக சீனி, பருப்பு, பாமா யில், ரவை ஆகியவற்றை குறைந்த விலைக்கு கூடுத லாக வழங்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தமிழக அரசானது, தீபாவளி பண்டிகைக்கு முந்தைய தினமான அக்டோபர் 23 ஞாயிறன்று நியாய விலைக் கடைகளை திறந்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேடசந்தூர் அருகே நாகம்பட்டியில் காட்சிப்பொருளான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
வேடசந்தூர், அக்.9- வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி யில் பொதுமக்களுக்கு சுத்தமான சுகா தாரமான குடிநீர் வழங்க தொடங்கப்பட்ட குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் மோட்டார் பழு தானதால் காட்சி பொருளாக உள்ளது.இத னால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரு கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியில் 100-க்கும் மேற்ப்பட்ட வீடுகள் உள்ளன.இந்த ஊரைச் சுற்றி நூடற்பாலைகள் உள்ளதால் அதிலி ருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீர் நிலத்தடியில் கலந்ததால் ஆழ்துளை கிணறு அமைத்தாலும் தண்ணீர் கிடைப்ப தில்லை. அப்படி தண்ணீர் கிடைத்தாலும் அது குடிப்பதற்கு தகுதியில்லை. இந்நிலையில் 2018 ஆம் வருடம் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த வி.பி.பி.பரம சிவம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் நாகம்பட்டி யில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைத்து ஆழ்துளை கிணற்றில் இருந்தும், காவிரி கூட்டுக்குடிநீரும் கொண்டு வந்து சுத்தி கரிப்பு செய்யப்பட்டு ஒரு குடம் ரூ.5க்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. சில ஆண்டு கள் செயல்பட்டு வந்தது. மோட்டார் பழுது ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டிய நிலையில் கிடக்கி றது. தனியார் வியாபாரிகள் கொண்டுவந்து விற்பனை செய்யும் ஒரு குடம் சுத்தகரிப்பு குடிநீரை ரூ 20க்கு வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தின் மோட்டாரை சீரமைத்து பொதுமக்களுக்கு சுத்தகரிப்பு குடிநீர் வழங்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து நாகம்பட்டி நாச்சிமுத்து (சமூக ஆர்வலர்) கூறுகையில், எங்களது ஊருக்கு சுத்தகரிப்பு செய்யப்பட்ட குடி நீர் திட்டத்தை கொண்டு வந்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சி சில ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. மோட்டார் பழுதாகி ஒரு வருடத்திற்கு மேல் பயன்பாடு இன்றி உள்ளது.மாவட்ட நிர்வாகம் உடன் தலையிட்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து நாகம்பட்டியில் உள்ள குடிநீர் மோட்டரை சீர மைத்து சீரான குடிநீர் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மதுரையில் மாநில உழவர் தின விழா
மதுரை, அக்.9- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழ கத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாநில அளவிலான உழவர் தின விழா மது ரையில் 3 நாட்கள் நடைபெறும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வி. கீதாலட்சுமி தெரி வித்தார். இதுதொடர்பாக மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமையன்று நடைபெற்றது. அதில், துணைவேந்தர் வி. கீதாலட்சுமி காணொலிக்காட்சி மூலம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறி யதாவது: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பொன் விழா ஆண்டையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. அத னொரு பகுதியாக, மாநில அளவிலான உழ வர் தின விழா அக்டோபர் 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான மதுரை வேளாண் மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. துவக்க விழாவில், தமிழக அரசின் வேளாண்மை- உழவர் நலந்துறை அமைச் சர், பிறதுறை அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், வேளாண் விஞ்ஞானிகள், தனியார் மற்றும் அரசு சாரா நிறுவன பிரதி நிதிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற் கின்றனர். இதில், புதிய பயிர் ரகங்கள், அதி நவீன தொழில்நுட்பங்கள், விவசாய திட்டங்கள், சேவைகள் பற்றிய விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் தொழில் நுட்ப கருத்துக்காட்சி நடைபெறும். தொழில்நுட்ப கருத்தரங்குகள், செயல் விளக்கங்கள், இடுபொருள் விற்பனை நடைபெறும். சிறந்த விவசாயிகளுக்கு உழ வர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் காணொலி மூலம் கல்லூரி முகப்பில், ‘ஏர் உழவன்’ சிலையை திறந்து வைத்தார். அப்போது, கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் பி.பி.முருகன், மதுரை அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பி.பி.மகேந்தி ரன், சமுதாய அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ்.காஞ்சனா ஆகியோர் உடனிருந்தனர்.