திருவில்லிபுத்தூர் ஜூன் 3- திருவில்லிபுத்தூர் நகராட்சி சுகாதார துறை சார்பில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் தீவிர தூய்மை மற்றும் விழிப்புணர்வு பேரணி நகராட்சி அலுவலகம் முன்பிருந்து துவங்கியது. நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் உறுதிமொழி வாசித்து பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் தூய்மை விழிப்புணர்வு குறித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது . பேரணியில் நகர்மன்ற துணைத்தலைவர் செல்வமணி, நகராட்சி பொறியாளர் தங்கப்பாண்டியன், நகராட்சி வரி மேல் முறையீட்டு குழு உறுப்பினர் மீரா தனலட்சுமி, முருகன், நகர் நல அலுவலர் கவிப்பிரியா ,சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.