districts

img

5 வருடங்களாக இழுத்தடிக்கப்படும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவக்கிடுக!

 ஆண்டுகளாக இழுத்தடிக் கப்படும் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை துவக்கிட வேண்டும் என்று பொது இன்சூரன்ஸ் ஊழி யர்கள் மாநாடு வலியுறுத்தியுள் ளது.  திண்டுக்கல்லில் பொது இன்சூ ரன்ஸ் ஊழியர்கள் சங்க 28 ஆவது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத்தலைவர்  பெரியசாமி தலைமை வகித்தார். மண்டல இணைச்செயலாளர் பாண்டியராஜன் துவக்கவுரை யாற்றினர். மாவட்டச்செயலாளர் கௌதமன் அறிக்கை சமர்ப் பித்தார். காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க இணைச் செயலாளா் ரமேஷ்  பாண்டி, சிஐடியு மாவட்ட தலைவர் பிரபாகரன், அதிகாரிகள் சங்க  முரளிதரன் ஆகியோர் வாழ்த்தி  பேசினர். மண்டலப் பொதுச்செய லாளர் ரமேஷ் நிறைவுரையாற்றி னார். மாவட்ட பொருளாளர் இராதா கிருஷ்ணன் நன்றி கூறினார். மாநாட்டில் பொது இன்சூ ரன்ஸ் நிறுவன ஊழியா்களுக்கு 2017 முதல் ஐந்து ஆண்டுகளாக நடத்தாமல் இழுத்தடிக்கும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும். ஊழியர் விரோத புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து 1995ஆம் வருடத்திய பென்சன் திட்டத்தில் அனனவரையும் இணைத்திட வேண்டும். அரசு  பொது இன்சூரன்ஸ் நிறுவனங்க ளில் காலியாக உள்ள பணியிடங் களை நிரப்பும் வகையில் புதிய ஊழியர் பணிநியமனத்திற்கான நடவடிக்கைகளை உடனடியாக துவங்க வேண்டும். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நான் கையும் ஒன்றாக இணைத்து ஒரே கழகமாக மாற்றிட வேண்டும். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவ னங்களை முழுவதுமாக விறபனை செய்திட வழிவகுக்கும் ஜிப்னா சட்  டத்தை திரும்பப்பெற வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநாட்டில் தலைவராக பெரி யசாமி, செயலாளராக கௌதமன்,  பொருளாளராக இராதாகிருஷ் ணன் மற்றும் நிர்வாகிகளாக ராஜ சேகர், ஜெகதாம்பாள், ரஞ்சித்,  மோகன் ஆகியோர் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.