districts

img

குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மக்கள் முற்றுகை

 சின்னாளப்பட்டி ,டிச.9-  நிலக்கோட்டையை அடுத்த சின்னமநாயக் கன்கோட்டை கிராமத்திற்கு முறையாக குடிநீர் வழங்கக் கோரி,நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தை வெள்ளியன்று கிராம மக்கள் காலிக்குடங்க ளுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டையை அடுத்து நூத்துலாபுரம் ஊராட்சிக் குட்பட்ட சின்னமநாயக் கன்கோட்டை கிராமத்தில் கடந்த சில நாட்களாக முறை யாக குடிநீர் வழங்கப்பட வில்லை என கூறப்படு கிறது.இதனால் குடி தண்ணீர் கிடைக்காமல்  அவ திப்படுவதாகக்கூறி  ஐம்ப துக்கும் மேற்பட்ட பெண்கள்  உட்பட கிராம பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நிலக் கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.   தகவல் அறிந்து வந்த நூத்தலாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சங்கிலி பாண்டியன் பொது மக்களிடம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இருப்பினும் அதிகாரிகளை சந்திக்காமல் போக மாட் டோம் என்று பொதுமக்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்,இதையறிந்த நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் யாகப்பன் உரிய முறை யில் கிராமத்திற்கு குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.