மதுரை, ஏப்.19- மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட நல்ல விளை நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவ னத்தின் துணையுடன் வீட்டடி மனை களாக்க முயற்சி நடைபெறுகிறது என்றும் பரவை பேரூராட்சிக்கு உட் பட்ட அபிகார்டன் குடியிருப்பு பகு திக்கும், வீட்டடி மனைகளாக்க முயற்சி செய்யும் சமயநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட விவசாய நிலத்திற்கும் இடையே உள்ள நீர்வழிச் சாலையின் (கால்வாய்) குறுக்கே தனிநபர் ஆதா யத்திற்காக மேம்பாலம் கட்டுவதற்கு துணை போகும் தமிழ்நாடு பொதுப் பணித்துறையினரின் முயற்சியை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ள னர். இதுகுறித்து வி. முருகன் மற்றும் பரவை 11 பிட் அபி கார்டன் பொது மக்கள், ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டம், பரவை பேரூ ராட்சிக்கு உட்பட்ட அபிகார்டன் குடி யிருப்பு பகுதியில் வசித்து வருகி றோம். எங்கள் குடியிருப்பு பகுதியின் வடக்கே சமயநல்லூர் - அரசன்குளம் கண்மாயையும், பரவை கண்மாயை யும் இணைக்கும் பிரதான நீர்வழிச் சாலை (கால்வாய்) உள்ளது. இந்த இரு கண்மாய்களுக்கும் இடையே, நீர்வழிச்சாலையின் குறுக்கே மூன்று மேம்பாலங்கள் ஏற்கனவே கட் டப்பட்டு பொதுப்போக்குவரத்து கும்.
விவசாய பயன்பாட்டிற்கும் எந்த வித சிரமமும் இல்லாமல் இப்பகுதி கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது சுமார் ஒரு வருடத்திற்கு முன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் எங்கள் குடியிருப்பு பகுதியின் வடக்கே நீர்வழிச் சாலைக்கு அப்பால் சுமார் 7 ஏக்கர் நஞ்சை விளைநிலங்களை கிர யமாக வாங்கியுள்ளனர். இவர்கள் மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை யை அணுகி சுய லாபத்திற்காக எங்கள் குடியிருப்பு பகுதியின் வடக்கே, நீர் வழிச்சாலையின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அறி கிறோம். சுமார் ஒரு வாரத்திற்கு முன் மதுரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு வந்து நில அளவை மேற்கொள்ளும் போது தான் எங்க ளுக்கு விபரம் தெரியவந்தது. மேற்படி விளை நிலங்களும், அதனை சுற்றி யுள்ள விளைநிலங்களும் சமய நல்லூர் அரசன்குளம் கண்மாயின் விளைநிலங்களாகும். தற்போது வரை விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது அபிகார்டன் குடியிருப்பு பகுதி வழியாக சென்று நீர்வழிச் சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க திட்டமிடுவது தனிநபர் ஆதாயத்திற்காகவே என்று நன்றாக தெரிகிறது. மேலும் தற்போது பாலம் கட்ட தேர்ந்தெடுக்கப்படும் இடத்திலி ருந்து சுமார் 50 முதல் 100 மீட்டர் தூரத்தில் கிழக்கு பகுதியில் ஒரு பால மும் (கள்ளிக்குடி ரோடு), மேற்கு பகு தியில் ஒரு பாலமும் (தோடனேரி ரோடு) ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. இரண்டு போக விளைச்சல் இருந்த போது கூட இந்த மேம்பாலங் கள் வழியாகத்தான் விவசாய பணி கள் தொய்வு இல்லாமல் நடைபெற் றன. தற்போது வரை நல்ல பயன்பாட் டில் உள்ளன. எனவே மேற்படி விசயத்தில் ஆட்சி யர் தலையிட்டு குடியிருப்பு பகுதி யின் வழியாக தனிநபர் ஆதாயத்திற் காக நீர்வழிச்சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள் ளதை நன்கு ஆய்வு செய்து மேம் பாலம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ள னர்.