districts

img

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

மதுரை, டிச.28-  86 மாத அகவிலைப்படி உயர்வு நிலு வையை உடனடியாக வழங்கக் கோரி  மதுரையில் மறியலில் ஈடுபட்ட ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அரசு போக்குவரத்துக்கழக நிர்வா கம் பிரதி மாதம் முதல் தேதியில் பென்  சன் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.போராடிப் பெற்ற உரிமைக்கு நீதிமன்ற தடை யாணை பெற்றுள்ளதை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மதுரை மண்டலம் சார்பில் டிசம்பர் 29 அன்று மதுரை பைபாஸ் சாலையில்  உள்ள அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பு மறியல் போராட்டம் நடை பெற்றது. மறியலுக்கு மாநிலத் தலைவர் எஸ். கிருஷ்ணன் தலைமை வகித்தார்.  மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற் கும் மேற்பட்ட போக்குவரத்து ஓய்வூ தியர்கள் பங்கேற்றனர். மாநிலத் துணைப்  பொதுச் செயலாளர் ஆர். தேவராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னார். அனைத்துத்துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் வி. பிச்சை ராஜன், மாவட்ட செயலாளர் அ.  பால்முருகன் உள்பட தோழமைச்சங்க நிர்வாகிகள் ஆதரித்துப் பேசினர்.  மறி யலில் ஈடுபட்ட 77 பெண்கள் உட்பட ஆயி ரத்திற்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.