தேனி, நவ.24- தேனி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு புதிய மேம்பாலம் அமையவுள்ள இடங்களை மாவட்ட ஆட்சி யர் க.வீ.முரளீதரன் ஆய்வு செய்தார் . தேனி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் மூலம் கொச்சின் - தொண்டி தேசிய நெடுஞ்சாலை யில் கொட்டகுடி ஆற்றுப்பாலம் முதல் மதுரை நோக்கி செல்லும் சாலையில் நேரு சிலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பிரிவகை மேம்பாலம் மற்றும் நேருசிலை சந்திப்பு முதல் பெரிய குளம் செல்லும் சாலையில் இரயில்வே சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரி சலை தவிர்க்க தேனி நகர் சாலையில் ரயில்வே மேம்பாலமும் அமையவுள்ள இடங்களை ஆட்சியர் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, நியாய விலைக் கடைகளில் பொருட்களின் இருப்பு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண் டிய குடிமைப் பொருட்களின் அளவு, புகார் அளிக்கப்பட வேண்டிய அலுவலர்களின் கைபேசி எண்கள் குறித்து முறையாக தக வல் பலகையில் பதியப்பட்டுள்ளதா என் பது குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, தேனி நெடுஞ் சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் ஆர்.கே.ரமேஷ், உதவிக்கோட்டப்பொறியாளர் வி.ராம மூர்த்தி, தேனி வட்டார போக்குவரத்து அலு வலர் செல்வக்குமார் உட்பட சம்பந்தப் பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.