districts

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 137 அடியை கடந்தது

தேனி,செப்.9-   நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால்  அணைக்கு நீர்வரத்து அதிக ரித்து, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியை கடந்தது.  வியாழனன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 137.35 அடியாக உள்ளது. நீர் வரத்து 2497 கன அடியாக வும், திறப்பு 1867 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 6458 மி.கன அடியாக உள்ளது.  கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.95 அடியாக இருந்தபோது அணையில் இருந்து கேரள பகுதிக்கு உபரிநீர் திறக் கப்பட்டது. இதனால் ரூல்கர்வ் முறைப் படி அணையில் இருந்து கேரளாவுக்கு உபரி நீர் திறப்பதை தவிர்க்க தமிழக பகு திக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையில் நீர் தேக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 137 அடியை கடந்துள்ளதால் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை 140.90 அடியாக நீர்தேக்க நடவ டிக்கை எடுக்கவும் அதனைத் தொடர்ந்து 142 அடி வரை நீர் தேக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வைகை அணையின் நீர்மட்டம் 70.70 அடியாக உள்ளது. நீர் வரத்து 2220 கன அடி. திறப்பு 2360 கன அடி இருப்பு 6013 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. நீர்வரத்து 460 கனஅடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடி. வரத்து 111 கனஅடி. திறப்பு 3 கன அடியாக உள்ளது. மழையளவு பெரியாறு- 22, தேக்கடி- 9.2, உத்தம பாளையம்- 1.2, வீரபாண்டி -3.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

;