districts

img

ஆன்-லைன் வர்த்தகத்தால் நெருக்கடிக்குள்ளாகும் மொபைல் போன் விற்பனை

மதுரை, அக்.10-  மதுரை மொபைல் போன் விற்பனையாளர்கள் சங்க எட்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.ஜோதி பாசு தலைமைவகித்தார், செயலா ளர் ஷேக் அப்துல்லா, பொருளா ளர் சண்முகம் ஆகியோர் உரை யாற்றினர். மதுரை  துணை மேயர்  தி. நாகராஜன் வாழ்த்திப் பேசினார். கூட்டத்தில், இந்திய அளவில் மொபைல் போன் விற்பனையா கிறது. எனவே இதற்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும். சிறு  குறு வியாபாரிகளை நசுக்கும் மற்  றும் ஒன்றிய அரசிற்கு வரி  இழப்பை ஏற்படுத்தும் ஆன்  லைன் வர்த்தகத்தை முறைப் படுத்த வேண்டும். மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்கள் டீலர்களுக்கு வழங்கும்  ஊக்கத் தொகையில் வருமான வரி பத்து  சதவீதம் பிடித்தம் செய்வதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.  சிறு வியாபாரிகளின் நலன் கருதி வருட ஜிஎஸ்டி உச்சவரம்பு ரூ.20 லட் சத்தை ரூ.40 லட்சம் ஆக உயர்த்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;