districts

img

ஆதி திராவிடர் பள்ளி, விடுதிகளில் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு

தேனி ,அக்.29- தேனியில் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவ, மாணவியர்கள் விடுதி கள் மற்றும் அரசு ஆதிதிராவிடர் பள்ளிக ளின் செயல்பாடுகள் குறித்து  ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ் ஆய்வு மேற்கொண்டார். தேனி-அல்லிநகரம் நகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவ, மாண வியர்கள் விடுதி ,தேனி-அல்லிநகரம் நகராட்சி அரசு ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளி மற்றும் குன்னூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை அமைச்சர்                   என்.கயல்விழி செல்வராஜ்  ஆய்வு செய்தார். ஆய்வின் போது,  மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள்  ஆ.மகாராஜன் (ஆண்டி பட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரிய குளம்) ஆகியோர் உடனிருந்தனர் . இந்த ஆய்வுக்கு பின் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறுகை யில்,  தேனி-அல்லிநகரம் அரசு ஆதிதிரா விடர் துவக்கப் பள்ளியில் 2 புதிதாக வகுப்பறைகள்  கட்டுவதற்கு சுமார் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

மேலும், குன்னூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி யில் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.தேனி மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பராம ரிப்பு பணிகள் மேற்கொள்ள சுமார் ரூ.50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார். ஆய்வின் போது,  மாவட்ட ஆட்சி யர் க.வீ.முரளீதரன், சட்டமன்ற உறுப்பி னர்கள்  ஆ.மகாராஜன் (ஆண்டி பட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரிய குளம்) ஆகியோர் உடனிருந்தனர் . மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பிரவிண் உமேஷ் டோங்கரே , முதன்மை கல்வி அலுவலர்  செந்திவேல் முருகன்,  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) செல்வராஜ் அவர்கள், தேனி-அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலு வலர்கள் உடனிருந்தனர்.