திண்டுக்கல், செப்.21- கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக திண்டுக்கல்லில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் ஏ.சுமதி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.பாலபாரதி சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ராணி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வனஜா, மாவட்டப்பொருளாளர் பாண்டியம்மாள், மாவட்ட துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட துணைச்செயலாளர்கள் பாப்பாத்தி, வி.சுமதி ஆகியோர் பேசினர்.