districts

img

மயில்கள் உலாவிய கோச்சடை கண்மாய் அழிவின் விளிம்பில்

மதுரை,டிச.13- மழைநீரை சேமித்து வைக்க நீர் நிலைகளை பாதுகாப்பது அவசியம். ஆனால் பல்வேறு நீர்நிலைகளில் குப்பைகள், பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதாரச்சீர்கேட்டை ஏற் படுத்தும் மையமாக மாறியுள்ளது. கரு வேலமரங்கள், செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது. இவைகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது அவசியமான ஒன்று.  மதுரை மாவட்டத்தில் பெரும்பா லான கண்மாய்கள் தூர்ந்து போய், குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றப் பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தா லும் கோச்சடை கண்மாய்க்கு தண்ணீர் வருவதில்லை.  குப்பை மேடாகி கண்மாய் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. கோச்சடை கண்மாயின் கொள்ளளவு 10.5 மில்லியன் கன அடி. கடந்த காலத்தில் வைகை ஆற்று தண்ணீர் துவரிமானில் இருந்து 2 கிலோமீட்டர்  கால்வாய் வழியாக கோச்சடை கண்மாய்க்கு வந்து கொண்டிருந்தது. கண்மாயை தூர்வாரி மழை நீரை தேக்க பொதுப்பணித் துறை நடவ டிக்கை எடுக்காததால் அந்த பகுதி முழுவதும் இன்று குடியிருப்புகளாக மாறி, கண்மாயின் பரப்பளவு குறைந்துவிட்டது. இதனால் 20 ஆண்டு க்கு முன் கண்மாயை பொதுப்பணித் துறை பாதுகாக்கும்  முயற்சியினை கைவிட்டது.  இந்தக் கண்மாயை சீரமைத்து பரா மரிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் ஏற்கெனவே மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. கோச்சடை சுற்றுப்பகுதிகளில் உள்ள மருத்துவக்கழிவுகள், மின் சாத னக் கழிவுகள், கட்டிக் கழிவுகள், தினசரி பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகள் கோச்சடை கண்மாயில் தான் கொட்டப்படுகின்றன. தினசரி கண்மாய்க்கு   மயில் உள்ளிட்ட பல பற வைகள், கால்நடைகள் இரைதேடி வருகின்றன.  இங்கு கொட்டப்படும் குப்பைகளைத் தின்று பெரும் இயற்கை உபாதைகளுக்கு ஆளாகின்றது.  இப்பகுதியினை சுற்றியுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளிலிருந்து  கழிவு நீரை கண்மாய்க்குள் திறந்து விடு கிறார்கள். 

கோச்சடை கண்மாயினை பாது காக்க வேண்டும்  என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பலமுறை  மாநகராட்சி மற்றும்  பொதுப்பணித்துறை நிர்வாகத்திடம் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால்  கண்டுகொள்ளாத போக்கிலே அரசு நிர்வாகம் உள்ளது.   கடந்த வாரம் மார்க்சிஸ்ட்  கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர்  மாவட்டச் செயலாளர் மா. கணேசன் கோச்சடை கண்மாயை  பார்வை யிட்டார். பின்னர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மேற்கு - 1 ஆம் பகுதிக் குழு  செயலாளர் கு.கணேசன் ஆகி யோர் கூறுகையில், முன்னாள் கூட்டு றவுத்துறை அமைச்சரும்  தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜு தற்போது வரை இந்த கண்மாயி னை பாதுகாப்பது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை.  அரசு நிர்வாகம் கண்மாயி னை தூர்வாரி நிரந்தரமாக நீர் தேக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இப்பகுதியினை சுற்றி சிறிது நடைபெற்று வரும் விவசாயமும் பாது காக்கப்படும். பல்வேறு வகையான பறவைகள் இங்கு வந்து செல்வதற்கு ஒரு இயற்கை சுற்றுலா இடமாக மாறுவ தற்கான வாய்ப்புகள் உள்ளது. இப்பகு தியில் உள்ள மக்களுக்கு பொழுது போக்கிற்கான இடங்கள் இல்லாத சூழ்நிலையில் கோச்சடை கண்மா யில் நிரந்தரமாக நீர் தேக்கப்பட்டால் அதனைச் சுற்றி பூங்காக்கள் அமைப்ப தற்கு நடவடிக்கை எடுக்கலாம். இப்படி மக்களுக்கு பயன் உள்ள வகையில் மாற்ற நினைக்காமல். மாநகராட்சி நிரந்தர குப்பை கிடங்காக கோச்சடை கண்மாயினை மாற்றி வருகிறது. இதை பல தனியார் குடியிருப்பு வாசிகள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தி அவர்களும் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். எனவே உடனடியாக கண்மாயினை பாதுகாக்க மாநக ராட்சியும் பொதுப்பணித்துறை நிர்வாக மும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.               (ந.நி)