districts

img

மத நல்லிணக்கம் போற்றும் மாமதுரை

மதுரை அரசியின் எழில் மிகு கோபுரங்கள் வரவேற்கும் மதுரை யில் தான் கோரிப்பாளையம் தர்காவும் ஓங்கி நிற்கிறது. இராமரின் மறுவடிவமான கள்ளழகர், கோரிப்பாளையம் அருகிலுள்ள தல்லாகுளத்தில் எதிர்சேவை கண்டு இஸ்லாமியரின் வழக்கமான சர்க்கரை பாத்தியாவை ஏற்றுக்கொண்டு துலுக்க நாச்சியார் வீடு செல்லும் மதுரை இது! இந்துவாகப் பிறந்து இஸ்லாத்தை தழுவி மதுரையின் கடைசி சுல்தானாக முடி சூட்டிக் கொண்டு ஆட்சி செய்து, சம்மட்டி புரம் தர்காவில்  அடக்கமான மாவீரன் கான்சாகிப் மருத நாயகத்தின் மதுரை இது! முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஒரு தர்காவையும் கொண்டிருக்கும் மதுரை இது! கிறித்தவ இறைப்பணியாளர்களின் கல்விச் சேவையினால் அறிவு நலம் சூழ்ந்திருக்கும் மதுரை இது! எம்மதத்தினராயினும் அம்மை நோயுற்றால் தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் தீர்த்தம் வாங்குவதையும், நோயுற்றால் கோரிப்பாளையம் தர்காவில் மந்திரிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் மதுரை இது! உணவு, உடை, வழிபாடு, பழக்க வழக்கங்களால் மதரீதியாக வேறுபட்டிருந்தாலும், ஒருவரையொருவர் சார்ந்து உறவுகளாக வாழும் மதுரை இது! இந்த ஒற்றுமை ஓங்கிட, மதவெறி சக்திகள் நம்மிடையே வளர விடாமல் தடுத்திட, மத  நல்லிணக்கம் தழைத்திட, நமது வேட்பாளர் சு.வெங்கடேசனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதும் மதுரை. மாமதுரையின் பெருமையும் இதுவே!

- இலாவண்யா குணசேகரன் மாவட்டக்குழு உறுப்பினர்,  தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு, மதுரை.