மதுரை, பிப்.5- மதுரை கே.கே.நகரில் வசித்து வந்த திமுக பிர முகர் மல்லிகை எம்.பாலச் சந்தர் பிப்ரவரி 5 சனிக்கிழ மையன்று காலமானார் . அவரது உடலுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்க டேசன், மாவட்ட செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், துணை மேயர் டி. நாகராஜன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மா. செல்லம், மாமன்ற உறுப்பி னர் டி.குமரவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெ.லெனின், டி. செல்வா, மின் ஊழியர் ஓய்வுபெற் றோர் நல அமைப்பு மாவட் டச் செயலாளர் மாரிச்சாமி, நகை பட்டறை தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் அழகேசன், மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. பாலமுருகன், சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலாளர் எம்.கணேசன் மற்றும் திமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன். முத்துராமலிங்கம், வி. வேலுச்சாமி, முன்னாள் மேயர் பெ. குழந்தைவேலு, சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மதிமுக சட்ட மன்ற உறுப்பினர் மு. பூமி நாதன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி தத்தனேரி மயனத்தில் நடை பெற்றது.