விருதுநகர், ஜூன் 18- விருதுநகர் அருகே உள்ள அல்லம் பட்டி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து தர வேண்டுமென ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப் பட்டது. விருதுநகர் ஒன்றியம், கூரைக்குண்டு ஊராட்சி 7 ஆவது வார்டுக்கு உட்பட்டது எம்ஜிஆர் நகர். இங்கு கழிவு நீர் செல்ல முறையான வாறுகால் வசதி இல்லை. மேலும், சாலை மற்றும் தண்ணீர்தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அல்லம்பட்டி கிளை சார்பில் பொது மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பின்பு, அப்பகுதி பொது மக்களைத் திரட்டி ஊராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதில், சிபிஎம் நகர் செயலாளர் எல்.முருகன், கிளைச்செயலா ளர் செல்வக்குமார் உள்ளிட்டோர் பங் கேற்றனர். மனுவை பெற்றுக்கொண்ட ஊராட்சி மன்றத் தலைவர் 2 மாதங்களில் கோரிக்கை களை நிறைவேற்றுவதாக உறுதிய ளித்தார்.