காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் 68 ஆவது மதுரை கோட்ட மாநாடு ஆக.23 (வெள்ளிக்கிழமை) அன்று அண்ணா பேருந்து நிலையம் எதிரில் உள்ள சுனில் மைத்ரா இல்லத்தில் நடைபெற்றது.
கோட்டத் தலைவர் என்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர். கருணாகரன் வரவேற்று பேசினார். அகில இந்திய இணைச் செயலாளர் எம்.கிரிஜா துவக்கவுரையாற்றினார். தென்மண்டல இணைச் செயலாளர் ஆர்.கே.கோபிநாத், தஞ்சைக் கோட்ட தலைவர் எஸ்.செல்வராஜ், மூட்டா தலைவர் ஏ.டி.செந்தாமரை கண்ணன், லியாபி பொதுச் செயலாளர் எஸ்.ராமசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா, லிகாய் பொதுச் செயலாளர் கே.மாரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தொடர்ந்து இந்த மாநாடு சனிக்கிழமை அன்றும் நடைபெறுகிறது. இதில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் என். முத்துஅமுதநாதன் “புதிய குற்றவியல் சட்டங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.