districts

உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நேரடியாக நடைபெறும் மதுரை ரயில்வே ஆலோசனைக்குழு கூட்டம்

மதுரை, டிச.12- மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு கூட்டம் இணைய வழியில் நடைபெற விருந்த நிலையில், உறுப்பினர்க ளின் கோரிக்கையை ஏற்று கூட்டம் வியாழனன்று மதுரை ரயில்வே கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.  இக்குழுவில் மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனை குழுவில்  வர்த்தக சபை, தொழில்கள் சார்ந் தோர், விவசாயம் சார்ந்தோர், பதிவு செய்யப்பட்ட ரயில் பயணிகள் சங்க உறுப்பினர், நுகர்வோர் அமைப்பு, மாற்றுத்திறனாளிகள் அமைப்பை சார்ந்தோர், எம்பிக்கள் மூலம் நியமிக்கப்பட்டவர்கள், ரயில்வே வாரியத்தால் சிறப்பு நிய மனத்தால் நியமனம் செய்யப் பட்டவர்கள், தமிழக அரசால் நிய மனம் செய்யப்பட்ட எம்எல்ஏ உள் ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரண மாக 2020 மற்றும் 2021 க்கான ஒரே ஒரு சந்திப்பு 24.12.21 அன்று இணைய வழியில் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது இவ் வாண்டிற்கான 2-ஆவது ஆலோ சனை குழு கூட்டம் டிசம்பர் 15-ஆம்  தேதி இணைய வழியில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.  ஆனால், ஆலோசனை குழு உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கூட்டம் நேரடியாக நடத்தப்படும் என மதுரை ரயில்வே கோட்டம், ஆலோசனை குழு  உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது.  இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பி னர் எஸ்.பாலா என்ற பாலவேலன் கூறுகையில், ‘‘ரயில்வே ஆலோ சனைக்குழு கூட்டத்தை நேரடியாக நடத்த வேண்டும் என்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாள ரிடம் கடிதம் மூலமாக வலியுறுத்தப் பட்டது. தற்போது ஆலோசனைக் குழு கூட்டம் நேரடியாக  நடத்தப் படும் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூட்டத்தில், கொரோனாவிற்கு முன்பு நீக்கப்பட்ட ரயில் நிறுத்தங்க ளை திரும்ப வழங்குதல், முன்பு சாதாரண பயணிகள் கட்டண ரயில் களாக இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்குதல், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்க ளுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்குதல் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தப்படும்’’ என அவர் கூறினார்.