districts

img

மனிதர்களை இயந்திரமாக்கி மரண(மல)க் குழிக்குள் தள்ளி மூன்று உயிர்களைப் பறித்த மதுரை மாநகராட்சி

மதுரை, ஏப்.22- மனிதர்களை இயந்திரமாக்கி மரண(மல)க் குழிக்குள் தள்ளி  மூன்று உயிர்களைப் பறித்துள் ளது மதுரை மாநகராட்சி நிர்வாகம். மனிதக் கழிவுகளை மனிதன் அகற்றுவ தற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; பாது காப்புக் கவசங்கள் இன்றி சாக்கடைகளுக் குள்ளோ. கழிவுகளைச் சேமித்து வைக்கும் கிணறுகளுக்குள்ளோ இறக்கக்கூடாது; மலக் குழிகள் மரணக்குழிகளாவதற்கு முடிவுகட்ட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இன்றைக் கும் இந்தக் கோரிக்கைகளுக்காகப் போராடி வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு இதுவரை கொள்கை ரீதியாகவோ, மனிதாபிமான அடிப்படையிலோ எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயம். இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் நேருநகரில் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டியை (பம்பிங் ஸ்டேஷன்) சுத்தப்படுத்துவதற்காக இரவு நேரத்தில் இறங்கிய மூன்று தொழிலா ளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் மதுரையை உலுக்கியுள்ளது.

மறுத்த தொழிலாளர்களும் கட்டாயப்படுத்திய ஒப்பந்ததாரரும்

உயிரிழந்த மூன்று தொழிலாளர்கள் உள்ளிட்ட சில தொழிலாளர்கள் கடந்த ஐந்து தினங்களாகத் தொட்டிக்குள் இறங்க மறுப்புத் தெரிவித்து வந்துள்ளனர். மாநகராட்சி உதவிப் பொறியாளர் சக்திவேல், சுகாதாரப்பணியை ஒப்பந்த முறையில் எடுத்துச் செய்துவரும் சென்னை விஆர்ஜி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத் தின் (மதுரை) மேற்பார்வையாளர் லோகநாதன் ஆகியோர் கொடுத்த இடைவிடாத டார்ச்சர் காரணமாக, வியாழக்கிழமை இரவு  ஒன்பது மணிக்கு  மதுரை மாடக்குளம் ஆண்டி அம்பலம் தெருவைச் சேர்ந்த அய்யணன் மகன் சிவக் குமார் (45), மாடக்குளம் சாமியாடி பெரிய கருப்பன் தெருவைச் சேர்ந்த அன்புச் செழியன் மகன் சரவணக்குமார் (30). அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேட்டைச் சேர்ந்த கந்த சாமி மகன் லெட்சுமணன் (32), மற்றும் கார்த்திக் ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் கார்த்திக் மட்டும் தொட்டிக்குள் இறங்கவில்லை. மற்ற மூவரும் ஒருவர் பின் ஒருவராக இறங்கி விஷவாயு தாக்கி உயிரிழந்த னர். உயிரிழந்தவர்கள் மிகவும் பிற்படுத்தப் பட்டோர், தேவேந்திரகுல வேளாளர், பட்டியல் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்றொரு பணியாளர் கார்த்திக் இவர்கள் மூவ ரையும் காப்பாற்ற முயற்சித்துள்ளார். அப்போது அவரும் விஷவாயு தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமாக உள்ளார். உயிரிழந்த சிவக்குமாருக்கு ஜெகதா (45)  என்ற மனைவியும் ஆர்த்தி (22) என்ற மகளும், சஞ்சய் (18) என்ற மகனும் உள்ளனர். சரவணக் குமாருக்கு காளீஸ்வரி (27) என்ற மனைவியும் தர்வேஷ் என்ற முதலாம் வகுப்பு படிக்கும் மகனும், எல்கேஜி படிக்கும் தனியா என்ற மக ளும் உள்ளனர். லெட்சுமணனுக்கு  பரமேஸ்வரி (22) என்ற மனைவி உள்ளார். 

மீட்புப்பணி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு முதலில் சென்றவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும் மதுரை மாநக ராட்சி துணை மேயருமான நாகராஜன் தான். அவரைத் தொடர்ந்து தீயணைப்பு மீட்புத்துறை யினர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாண்டி  தலைமையில் வந்த வீரர்கள் 35 அடி ஆழ முள்ள கிணற்றிற்குள் இறங்கி  மூன்று பேர்  உடலையும் மீட்டுள்ளனர். துணை மேயர் நாக ராஜன்தான் மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி அதிகாரிகள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினருக்குத் தகவல் கொடுத்துள் ளார். மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் உள்ளிட்ட அதிகாரிகள், மாநகராட்சி மேயர் பி.இந்தி ராணி மற்றும் கட்சியின் மூத்த தலைவர் சி.ராம கிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் மற்றும் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளனர். நள்ளிரவு இரண்டு மணிக்குத்தான் மீட்புப் பணி நிறைவடைந்தது. மூன்று பேரின் உடல்களும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன், மாநகர் மாவட்டச் செயலா ளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலா ளர் கே.ராஜேந்திரன், சி.இராமகிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிர மணியன், இரா.லெனின், வை.ஸ்டாலின், ஜா. நரசிம்மன், ஜெ.லெனின், டி.செல்வா பகுதிக் குழுச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்கு வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.

சு.வெங்கடேசன் எம்.பி., வலியுறுத்தல்

கடந்த காலங்களில் மதுரையில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் உயிரிழந்த மூன்று தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப் பணி வழங்கவேண்டும். இரவு நேரத்தில் பணியாற்ற நிர்ப்பந்தித்த மாநகராட்சி அதிகாரி கள் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த  மரணம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கி விஷவாயு தாக்கி உயிரிழப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தமிழக அரசை வலியுறுத்தினார்.

தலா ரூ.25 லட்சம்  நிவாரணம் வழங்குக

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும். மதுரை மாநகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டு வந்து அனை த்து ஊழியர்களையும் மாநகராட்சியின் அதி காரப்பூர்வ ஊழியர்களாக அறிவிக்க வேண்டு மென மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க (சிஐடியு) பொதுச் செயலாளர் மா.பால சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறினார். கேரளம் மாநிலத்தில் பாதாளச்சாக்கடை அடைப்பை நீக்குவதற்கு, தொட்டிகளைச் சுத்தப்படுத்துவதற்கு நவீன இயந்திரங்கள் உள்ளன. தமிழகமும் அது போன்று இயந்தி ரங்களை வாங்க வேண்டுமெனக் கடந்த பத்தாண்டுகளாக சுகாதாரப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் தமிழக அரசை வலி யுறுத்தி வருகின்றனர். ஒவ்வொரு போராட்டத் தின் போது ஊழியர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைப்பது வழக்கம். எடப்பாடி பழனிச்சாமி அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டுமென பணியா ளர்கள் வலியுறுத்தினர்.

உயிரிழப்பிற்குக் காரணம் யார்?

பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைக் கண்காணிக்க வேண்டிய ஒப்பந்த நிறுவன மேலாளரும், மதுரை மாநகராட்சி அதிகாரிகளும்  பணியிடத்தில் இல்லை. பாதாளச் சாக்கடையி லோ, ஆபத்தான கிணறுகளிலோ பணியில் ஈடு படும் போது அதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டுமென்ற விதியை மதுரை மாநகராட்சி நிர்வாகம் காற்றில் பறக்கவிட்டுள்ளது. பகலில் செய்ய வேண்டிய பணியை இரவில் செய்ய உத்தரவிட்ட அதிகாரி, மற்றும் ஐந்து நாட்க ளாகக் கிணற்றில் இறங்க மறுத்த தொழிலா ளர்களை  நிர்ப்பந்தப்படுத்தியவர்கள் தான் மூன்று உயிர்கள் பலியானதற்குக் காரணம் என ஆணித்தரமாகக் கூறுகின்றனர் பணியாளர்கள்.

பொறுப்பு யார்? 

பாதாளச் சாக்கடை, கழிவு நீர்த் தொட்டி களில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.  இந்த மனுவை  விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி  சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு “பாதாளச் சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யச் செய்யும் மனிதத் தன்மை யற்ற செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியது. கழிவு நீரை சுத்தம் செய்யும்போது மரணங்கள் நிகழ்ந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் மீது குற்ற வழக்குத் தொடரப்பட்டு, உடனடி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடரும் துயரம்

கடந்த மூன்று ஆண்டுகளில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்  பணியில் ஈடுபட்டு 161 பேர் உயிரிழந்துள்ளனர் என ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் வீரேந்திர குமார் தெரிவித்துள்ளார்.  2019- இல் 118, 2020- இல் 19 மற்றும் 2021 இல்- 24 இறப்புகள் பதிவாகியுள்ளன என்றார். 1993 ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு  வரை 971 பேர் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது இறந்துள்ள னர் என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 31  வரையிலான ஐந்து ஆண்டுகளில், 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், உத்தரப் பிரதேசம் (52), தமிழ்நாடு (43) மற்றும் தில்லி (36) என மொத்தம் 340 பேர் சாக்கடைகள் மற்றும் கழிவு நீர்த் தொட்டிகளை கைகளால் சுத்தம் செய்த தால் உயிரிழந்துள்ளனர்.