ஐடி வாலிபர் தற்கொலை
தேனி, ஜன.17- போடியில் தனியர் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். போடி ஜக்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(64). இவருக்கு தயாளன், யோகேஸ்வரன் என்ற இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திரு மணமாகி சென்னையில் வசித்து வரு கிறார். இளைய மகன் யோகேஸ்வரன் சென்னை ஐடி.நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார். தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய விரும்பி உள்ளார். இதற்கு செல்வராஜ் குடும்ப சூழ்நிலையைக் கூறி திருமணத் திற்கு சில மாதம் காத்திருக்கும்படி கூறி யுள்ளார். இதனால் கோபமடைந்த யோகேஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போடி நகர் காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.
வைகை அணை அருகே கால்வாயில் குளித்தவர் பலி
தேனி, ஜன.17- வைகை அணை அருகே கால்வாயில் குளித்தவர் தண்ணீரில் மூழ்கி பலியா னார். மதுரை பாத்திமாநகர் ஆசைத்தம்பி தெருவைச் சேர்ந்தவர் இருளப்பன்(42). தனது மனைவி நாகேஸ்வரியுடன் பொங் கல் பண்டிகைக்காக தேனி மாவட்டம் குரும்பபட்டிக்கு வந்திருந்தார். வைகை அணை அருகே உள்ள 58-ஆம் கால்வா யில் இருளப்பன் குளித்துக் கொண்டி ருந்தார். அப்போது நீரில் மூழ்கி உயிரி ழந்தார். தகவலின்பேரில் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்.
பாலியல் தொந்தரவு : ஒருவர் கைது
சிவகாசி, ஜன.17- சிவகாசி அருகே மனநலம் பாதிக்கப் பட்ட 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்த ரவு கொடுத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். சிவகாசி அருகே பெண் ஒருவர், கண வனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவ ருக்கு ஒரு ஆண் மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டா வது பெண் குழந்தை சற்று மனநலம் பாதிப்புள்ளவர். 11 வயதுடைய அச் சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ சேகர் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறை யினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜசேகர் என்பவரைக் கைது செய்தனர்.
விவசாயி தற்கொலை
திருவில்லிபுத்தூர், ஜன.18- வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ஜூனா புரத்தைச் சேர்ந்தவர் மாரி முத்து (43) இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு பேச்சியம்மாள் ராம லிங்கம் செல்வம் என மூன்று குழந்தை கள் உள்ளனர் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மாரிமுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் வத்திரா யிருப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.'
நாயால் பலியான ஓய்வு ராணுவ வீரர்
திருவில்லிபுத்தூர், ஜன.18- வத்திராயிருப்பு மறவர் வடக்கு தெரு வைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் வயது (71) ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி இவர் திரு வில்லிபுத்தூரில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில வத்திராயிருப்புக்கு செல்லும்போது கோபாலபுரம் அருகே நாய் குறுக்கே வந்தது இதில் கிருஷ்ணன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். ஆபத் தான நிலையில் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில தந்தை பலி: மகன் காயம்
நத்தம், ஜன.18- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சி-சாயக்காரன்பட்டியை சேர்ந்தவர் ராசு மகன் சக்திவேல். (38). திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். பொங்கல் விடுமுறைக்காக வந்த அவர் தனது மகன் ஸ்ரீதருடன் (6) சாயக்கா ரன்பட்டியிலிருந்து மங்களபட்டிக்கு சொந்த வேலையாக இரு சக்கர வாக னத்தில் சென்று விட்டு திரும்பும்போது அவரது வாகனம்நிலை தடுமாறி மைல் கல்லில் மோதியது. இதில் சக்திவேல் பலி யானார். மகன் ஸ்ரீதர் காயங்களுடன் துவ ரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நத்தம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீர்நிலைகளில் மூழ்கி மூவர் பலி
சாத்தூர், ஜன.17- விருதுநகர் மாவட்டம் சாத் தூர் அருகேயுள்ள என்.வெங்க டேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த வர் அபிநயா (19). கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதி யை சேர்ந்த மனோரஞ்சனி(17) 12ம் வகுப்பு மாணவி ஆவார். ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு விடுமுறை என்பதால் இரு வரும் அந்தப் பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்கச் சென்றுள் ளனர். அப்போது தண்ணீரில் ஆழ மான பகுதிக்கு சென்றதால் இரு வரும் உயிருக்குப் போராடினர். இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவரையு பரி சோதனை செய்த மருத்துவர், அபிநயா உயிரிழந்து விட்ட தாக தெரிவித்தார். மலும் மனோ ரஞ்சனி காயமடைந்த நிலை யில் மேல் சிகிச்சைக்காக தூத் துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். மற்றொரு சம்பவம்: தாயில் பட்டி அருகே பேர்நாயக்கன் பட்டியை சேர்ந்த சுந்தர்ராஜின் மனைவி சந்தனமாரி (27). அந்தப் பகுதியில் உள்ள ஊர ணிக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, ஆழமான பகு திக்குச் சென்றதால், மூச்சுத் திணறி உயிரிழந்தார். மற்றொரு சம்பவம் சிவகாசி அருகே உள்ள அம்மாபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (40). இவர் அதே பகுதியில் உள்ள கண்மாயில் குளித்தபோது திடீ ரென மாயமானார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் முத்துப்பாண்டியின் உடலை மீட்டனர்.
வன ஊழியரை தாக்கிய வாலிபர்
திருவில்லிபுத்தூர், ஜன.18- வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் வனப்பகுதியில் குத்துக்கல் கேணி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதி உள்ளது. சம்பவத்தன்று காஞ்சி புரத்தைச் சேர்ந்த முருகன் மற் றும் அவரது நண்பர்கள் அங்கு சென்று குளித்துக் கொண்டி ருந்தனர் இந்த தகவல் அறிந்த திருவில்லிபுத்தூர் கான்சாபுரம் பீட் வனக்காவலர் முத்தரசன் அங்கு சென்று முருகன் மற்றும் நண்பர்களை கண்டித்துள்ளனர் இதில் ஆத்திரமடைந்த அவர் கள் முத்தரசனை சூழ்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் இதுகுறித்து முத்தரசன் கூமா பட்டி காவல்துறையில் புகார் அளித்தார். விசாரணை நடை பெற்றுவருகிறது.
சிறந்த காளைகளுக்கு பரிசு
அலங்காநல்லூர், ஜன.17- அலங்காநல்லூரில் திங்க ளன்று நடைபெற்ற ஜல்லிக் கட்டில் புதுக்கோட்டை மாவட் டம் கைக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் காளை முதல் பரிசான காரையும், திருமங்க லம் முத்துராமலிங்கம் (சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர்) காளை இரண்டாம் பரிசான இரு சக்கர வாகனத்தையும் பெற் றது. குலமங்கலம் வழக்கறிஞர் கு.திருப்பதி காளை மூன்றாம் பரிசை பெற்றது. காளையின் உரிமையாளருக்கு பசுவும்-கன்றும் பரிசளிக்கப்பட்டது.
நான்கு காவலர்களுக்கு கொரோனா
தேனி, ஜன.17- தேனி மாவட்டம் பெரியகுளம் காவல்நிலையத்தில் பணியாற்றும் நான்கு காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாதால் நான்கு காவலர்களும் தனி மைப்படுத்தப்பட்டு உள்ளனர் தேனி மாவட்டம் பெரிய குளம் உட் கோட்டம் பெரியகுளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் ஆவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நான்கு பேரும் அவரவர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பெரியகுளத்தில் திருட்டு, வழிப்பரி, போக்சோ, உள்ளிட்ட ஆறு வழக்கு களில் சம்பந்தப்பட்ட குற்றவாளி வினோத் என்பவரை நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் மேற்படி குற்றவாளி வினோத்தை கைது செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் பெரியகுளம் காவல் நிலையத்தில் பணிபுரியும் நான்கு காவலர்கள் தனிப்படை அமைத்து திருப்பூரில் தலைமறைவாக இருந்த வினோத் என்பவரை கைது செய்து பெரியகுளம் காவல் நிலையத்தில் ஒரு நாள் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி நீதிமன்ற உத்த ரவுபடிசிறையில் அடைத்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட வினோத்திற்கு தொடர்ந்து காய்ச்சல் மற்றும் இருமல் இருந்து வந்ததால் அவரைப் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மாதர் சங்க கிளை அமைப்பு
மதுரை, ஜன.17- ஜெய்ஹிந்த்புரம் 90-ஆவது வட்டம் சாஸ்திரி நகரில் மாதர் சங்க புதிய கிளை அமைக்கப்பட்டது. தலைவர்: ராணி, செயலாளர்: அஞ்சுதா, பொருளாளர்:கிருத்திகா. மேலப்பொன்னகரம் மோதிலால் 1-ஆவது தெருவில் மறைந்த தோழர் நாகம்மாள் பெயரில் புதிய கிளை அமைக்கபட்டது, 25 பெண்கள் கலந்து கொண்டனர். தலைவர்-சுந்தரி. செயலாளர்-சத்ய ஷீலா, பொருளாளர்-செல்வி. ஜெய்ஹிந்த்புரம் 92 வது வார்டில் மாதர் சங்க புதிய கிளை அமைக்கபட்டது. தலைவர்-புவனேஸ்வரி, செய லாளர்-பாலமீனாட்சி, பொருளாளர்-மீனாட்சி. கிளை அமைப்பு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.சசிகலா, மாவட்ட நிர்வாகி ஜென்னி, மாவட்டக்குழு உறுப்பினர் முனீஸ்வரி, பகுதிக்குழு உறுப்பினர் பாரதி மற்றும் மகேஷ், செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கட்டுமானத் தொழிலாளர் சங்க கிளை அமைப்பு
காரியாபட்டி, ஜன.17- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அழகியநல்லூரில் கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு)புதிய கிளை அமைக்கப்பட்டது. கிளைத் தலை வராக ஜெ.கந்தசாமி, செயலாளராக எஸ்.முனியாணி, பொருளாளராக வி.ராஜ்குமார், துணைச் செயலாளராக எம்.முனுச்சாமி, துணைத் தலைவராக ஆர்.செந்தில்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அமைப்புக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் பி.ராமர், மாவட்டப் பொருளாளர் எம்.பரமசிவம், வட்டச் செய லாளர் எம். முகமதுஅலிஜின்னா, பாண்டியராஜ், கதி ரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு மாடு பலி
சின்னாளபட்டி, ஜன.17- திண்டுக்கல் மாவட்டம் ஏ.வெள்ளோடு கிராமத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். முன்னதாக வெள்ளோட்டில் உள்ள பகவதி யம்மன் கோவிலுக்கு மாட்டின் சொந்தக்காரர்கள் உழவர் திருநாளை முன்னிட்டு மாட்டிற்கு மந்திரிப் பதற்காக மாடு களை வண்டிகளில் ஏற்றி வெள்ளோடு கோவிலுக்கு கொண்டு வந்தனர் அப்போது கல்லுப்பட்டியை சேரந்த ஆட்டுக்காரசே சு என்பவரது மாடு வேங்கடான் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்ததில் இறந்து போனது திண்டுக்கல் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மாட்டின் சடலத்தை எடுத்தனர் விபத்து குறித்து அம்பாத்துரைக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிபட்டியில் இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி
தேனி, ஜன.17- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிப் பகுதி களில் 18 வார்டுகள் உள்ளனர். இதில் சக்கம்பட்டி பகுதி யில் உள்ள 14-ஆவது வார்டு சுப்பிரமணி கோவில் தெரு பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களது பயன்பாட்டிற்காக கடந்த 26 ஆண்டுகளுக்கும் முன்பு தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த தண்ணீர் தொட்டிக்கான நீர் அருகில் உள்ள கிணற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. தற்போது தண்ணீர் தொட்டி மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. தண்ணீர் தொட்டி பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், பேரூராட்சி நிர்வாகத்தினர் விநியோகிக்கப்படும் குடிநீர் போதுமான இல்லை. எனவே நாங்கள் இந்தத் தொட்டி யில் உள்ள தண்ணீரை தான் பயன்படுத்தி வருகிறோம். இந்த தண்ணீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் தொட்டி யை சுத்தம் செய்யாத காரணத்தால் தண்ணீரில் புழுக்கள் உருவாகியுள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பேரூராட்சி நிர்வாகம் தங்களது பகு திக்கு புதிய தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும் என்று தெரிவித்தனர்.
வீட்டில் குட்கா, மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது!
தூத்துக்குடி, ஜன. 17 குரும்பூர் அருகே வீட்டில் சட்டவிரோதமாக புகையிலை பொருள்கள் மற்றும் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின் பேரில், குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ராம கிருஷ்ணன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வா ளர் ஆறுமுக நயினார், தலைமை காவலர் பால சுப்பிரமணியன், முதல் நிலை காவலர்ஆனந்த கணேஷ் மற்றும் குரும்பூர் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் சந்தோஷ் ஆகியோர் ஞாயிறன்று அருளானந்தபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குரும்பூர் அருளானந்தபுரம் பகுதி யைச் சேர்ந்த செல்லதுரை மகன் ஸ்ரீநாத் துரை (எ) சின்னத்துரை (44) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ரூ.28,500 மதிப்புள்ள 65 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் 427 மதுபாட்டில்க ளையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா பரவல் தடுப்பு விதிமீறல்: 19 பேர் மீது வழக்குப் பதிவு: 586 பேருக்கு ரூ.1.17 லட்சம் அபராதம்!
தூத்துக்குடி, ஜன. 17 தற்போது ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொது இடங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக் கப்பட்டுள்ளது. அதே போன்று முகக் கவசம் அணி யாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு தலா ரூ.200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு தலா ரூ.500 அபராதமும் விதிக்கப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிறன்று (16.01.2022) தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 19 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் முக கவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 166 பேர் மீதும், ஊரக உட்கோட்டத்தில் 83 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 37பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 121 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 34 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 58 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 32 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 57 பேர் மீதும் என மொத்தம் 586 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1,17,200/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கல்விக்கட்டணம் செலுத்த முடியாத வேதனையில் நர்சிங் மாணவி தற்கொலை நாகர்கோவில், ஜன.17-
களியக்காவிளை அருகே கழுவன் திட்டை ஆர்.சி.தெரு பகுதியை சேர்ந்த வர் ஜெஸ்டின். இவரது மகள்பென்சி (19) இவர் மார்த்தாண்டத்தில் தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார். பென்சி ஞாயிறன்று (ஜன.17) இரவு வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்தவர் தனது அறை யில் தூங்கச் சென்றுள்ளார். காலை யில் அறை திறக்கப்படாத நிலையில் தாயார் நீண்ட நேரம் கதவை தட்டி யுள்ளார். சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தபோது, பென்சி தூக்கு போட்டு தற்கொலை செய்துள் ளது தெரியவந்தது. இது குறித்து களியக்காவிளை காவல்துறையினர் தூக்கில் பிணமாக தொங்கிய மாணவி பென்சியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர்.வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பென்சி, கல்வி கட்டணம் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலை தயாரிடம் வெளிப் படுத்தியுள்ளார். மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜன.20ல் நெல்லையில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்
திருநெல்வேலி ,ஜன. 17- நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளங்களில் வசிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவை களை கணக்கெடுக்கும் பணி வருகிற 30-ந்தேதி தொடங்கு கிறது. வடகிழக்கு பருவமழையின் போது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி வழியும். இந்த நேரங்களில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் ஏராளமானவை குளங்களில் வந்து தங்கும். நெல்லை மாவட்டத்தில் கூந்தங்குளம், நயினார்குளம், வடக்கு கழுவூர், தென்காசி மாவட்டத்தில் வாகைக்குளம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் செட்டிகுளம் உள்ளிட்ட குளங்களுக்கு ஆண்டு தோறும் சீசன் நேரங்களில் பறவை கள் வந்து குவியும்.கடந்த சில ஆண்டுகளாக பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து கூடு கட்டி இனப் பெருக்கம் நடத்தி வருகிறது. இவற்றின் வாழ்விடங்களான நீர்நிலைகளை பாது காக்கும் பொருட்டு அகத்திய மலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையம், நெல்லை வனத்துறை உள்ளிட்டவை இணைந்து பறவைகளை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன்படி 12-வது தாமிரபரணி பறவைகள் கணக் கெடுப்பு வருகிற 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறு கிறது. இந்த கணக்கெடுப்பில் கலந்து கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் https://forms.gle/NPF2eiWeQ25ivF6WA என்ற லிங்கில் பதிவு செய்யலாம். மேலும் twbc2020@gmail.com மின்னஞ்சல் மூலம், செல்போன் எண் 9994766473 வழியாகவும் பதிவு செய்ய வரும் 19-ம் தேதி கடைசி நாளாகும். கடந்த ஆண்டு 62 குளங்களில்பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நெல்லையிலிருந்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருநெல்வேலி, ஜன. 17- பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை உள்பட வட மாவட்டங்களில் இருந்து, தென்மாவட்ட பகுதிக்கு ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதுபோல நெல்லை, தூத்துக்குடி, தென்காசி பகுதியில் இருந்து பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும் சுமார் 225 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது பொங்கல் பண்டிகை முடிந்து பல்வேறு தரப்பின ரும் ஊருக்கு திரும்பி வருகிறார்கள். தென் மாவட்டத்தின் புகழ்பெற்ற தைப்பூச திருவிழா செவ்வாய்க்கிழமை திருச் செந்தூரில் நடை பெறுகிறது.மேலும் 18 -ந்தேதி வரை அரசு ஊழி யர்களுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி பகுதியில் இருந்து திங்கட்கிழமை ஒரேநாள் சிறப்பு பஸ்கள் இயக்காமல், 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 3 நாட்களாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.தினசரி ஒரு நாளைக்கு 70 பஸ்கள் வீதம் சிறப்புபேருந்து களை இயக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.சென்னை, கோவை, திருப்பூர் பகுதிக ளுக்கு இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் மதுரை, திருச்சிக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர செவ்வாய்க்கிழமை தைப்பூசம் என்பதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூரு க்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசம் முடிந்து சென்னை மற்றும் வட மாவட்டம் செல்லும் பயணிகளுக்காக 19-ந் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.இந்த மூன்று நாட்களிலும் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மொத்தம் 225 பேருந்துகளும், விரைவு போக்கு வரத்து கழகம் சார்பாக 25 சிறப்பு பேருந்து களும் இயக்கப்படு கிறது.இது தவிர எந்தப் பகுதிக்கு பயணிகள் கூட்டம் அதிக மாக உள்ளதோ அங்கு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்கு வரத்து கழக அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளார்கள். திங்கட்கிழமை முதல் வட மாவட்டங்களுக்கு செல்லும் பயணி கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அனைத்து பேருந்து நிலையங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நெல்லையில் 5 மருத்துவர்கள் உள்பட 284 பேருக்கு கொரோனா
திருநெல்வேலி, ஜன .17- நெல்லை மாவட்டத்தில் திங்கட்கிழமை புதிதாக 284 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.இதில் மாநகர பகுதியில் மட்டும் 159 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். பாளையில் 21 பேருக்கும், மானூரில் 8 பேருக்கும், அம்பை, சேரன்மகா தேவியில் தலா 3 பேருக்கும், பாப்பாக்குடியில் 2 பேருக்கும், களக்காடு, நாங்குநேரியில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் 5 மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், விடுதியில் உள்ள மாணவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்கள், பணகுடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீ சார், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் அடங்குவர்.தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் நெல்லையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் பெரும் பாலானோருக்கு லேசான பாதிப்பு இருப்பதால் அவர்கள் வீட்டு தனிமையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் மருத்துவ கல்லூரியில் ஏராளமான படுக்கைகள் காலியாகவே உள்ளன. நேற்றைய நிலவரப்படி சுமார் 60 பேர் மட்டுமே உள்நோயாளியாக கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.