திண்டுக்கல், மார்ச் 10- திண்டுக்கல்லில் எல்ஐசி பங்கு விற்பனைக்கு எதிராக எல்ஐசி ஊழி யர்கள் வியாழனன்று மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்ஐசி-2 கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மதுரை மண்டல துணைத்தலைவர் எஸ்.ஏ.டி.வாஞ்சிநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கிளைச் செயலாளர் தங்கவேல், கிளைத்தலைவர் ஜான்சன், மகளிர் துணைக்குழு இணை அமைப்பாளர் வனிதா, வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் சார்பில் கிளைச் செயலாளர் அருள் மழை ஆகியோர் பங்கேற்றனர். இதில், எல்ஐசி ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள் முகவர்கள் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். மதுரை மதுரை செல்லூரில் உள்ள எல்ஐசி கோட்ட அலுவலக வளாகத்தில் நடை பெற்ற போராட்டத்திற்கு கோட்டத் தலைவர் ஜி.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். இதில் மாநக ராட்சி துணை மேயர் டி.நாகராஜன், சங்கத்தின் கோட்டச் செயலாளர் என்.பி.ரமேஷ் கண்ணன் மற்றும் ஊழி யர்கள், முகவர்கள், ஓய்வூதியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விருதுநகர் விருதுநகர் கச்சேரி சாலையில் உள்ள எல்ஐசி அலுவலக வளா கம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு சங்கத்தின் தலைவர் பி.கே.பவளவண்ணன் தலைமையேற்றார். சங்க நிர்வாகிகள் கதிர்வேல்பாண்டி யன், அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் ரமேஷ் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில், உமேஷ்ரத்தன் பாபு, கண்ணன், பெருமாள் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.